குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை நீட்டிப்பு:மத்திய அரசு ரூ.2,900 கோடி ஒதுக்கீடு குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை நீட்டிப்பு:மத்திய அரசு ரூ.2,900 கோடி ... ...  ஏற்றுமதி ரூ.1.84 லட்சம் கோடி ஏற்றுமதி ரூ.1.84 லட்சம் கோடி ...
குவிண்டாலுக்கு ரூ.200 சர்க்கரை விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
23:39

சேலம்:சர்க்கரை விலை, குவிண்டாலுக்கு, 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.நடப்பு, 2018 – 19ல், சர்க்கரை உற்பத்திக்கு, 30.7 மில்லியன் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


கடந்த ஜனவரி இறுதி வரை, 18.5 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியானது. அதில், செலவினம் போக, தற்போது, 10.72 மில்லியன் டன் சர்க்கரை கையிருப்பில் உள்ளது.கடந்த ஆண்டு, அக்டோபரில் துவங்கிய கரும்பு அரவை, வரும் மே இறுதியில் நிறைவு பெறுவதால், மேலும், 12.2 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.


நம் தேவை, 26 மில்லியன் டன் என்பதால், நாட்டில், சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களில், கரும்பு நிலுவைத் தொகை, தற்போதைய, 20 ஆயிரம் கோடியில் இருந்து, 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, சர்க்கரை ஆலைகள் கவலை தெரிவித்துள்ளன.அதனால், 1 குவிண்டால் அதாவது, 100 கிலோ சர்க்கரை கொள்முதல் விலையை, 2,900 லிருந்து, 3,500 ரூபாயாக உயர்த்த கோரி வந்தன.


இதையடுத்து, நேற்று மத்திய அரசு, 1 குவிண்டாலுக்கு, 200 உயர்த்தி, 3,100 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.இது குறித்து, மளிகை வியாபாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, சில்லரை விற்பனையில், 1 கிலோ சர்க்கரை, 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, புதிய விலை உயர்வால், 38 ரூபாயாக அதிகரிக்கும். ஜி.எஸ்.டி., 5 சதவீதம், லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி உட்பட இதர செலவினங்களை சேர்த்து, அதிகபட்சம், கிலோவுக்கு, 3 ரூபாய்க்கு மேல் உயர்த்த வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)