சேலம் உருக்காலையை விற்க முடிவு சேலம் உருக்காலையை விற்க முடிவு ...  சரக்குகளை சோதனை செய்ய அனுமதி  ரயில்வேக்கு வணிக வரி துறை கடிதம் சரக்குகளை சோதனை செய்ய அனுமதி ரயில்வேக்கு வணிக வரி துறை கடிதம் ...
ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் சென்னையில் புதிய ஆலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
07:21

சென்னை : ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் நிறுவனம், சென்னையில், ஐ.சி.எப்., நிறுவனத்துக்கு தேவையான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாகங்களை தயாரித்து வழங்குவதற்காக, புதிய ஆலை ஒன்றை அமைத்துள்ளது.

ஜெ.எஸ்.எல்., லைப்ஸ்டைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், ரயில் பெட்டிகள் தயாரிக்க பயன்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்களை, ஐ.சி.எப்., நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட முடியும் என்றும், 300 கோடி ரூபாய் வருவாயை எதிர்பார்ப்பதாகவும் ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில், 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையிலிருந்து, தரமிக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்களை ரயில் பெட்டி தயாரிப்பதற்காக வழங்க இருக்கிறது.இந்த ஸ்டீல்கள் ரயில் பெட்டியின் தரை, கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும்.

இது குறித்து, ஜெ.எஸ்.எல்., லைப்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபிகா ஜிண்டால் கூறியதாவது:எங்களுக்கும் இந்திய ரயில்வேக்கும் இடையே, 20 ஆண்டுகளாக நல்ல தொடர்பு உள்ளது. இப்போது சென்னையில் அமைத்துள்ள இந்த ஆலையின் மூலம், இந்த உறவு மேலும் வலுப்படும்.

இந்த ஆலையில் ஆண்டுக்கு, 4,800 டன் பாகங்கள் தயாரிக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது, 7,200 டன்னாக அதிகரிக்கப்படும். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட, ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ், ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால், ஐ.சி.எப்.,பி-ல் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)