ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் சென்னையில் புதிய ஆலை ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் சென்னையில் புதிய ஆலை ...  சிமென்ட், கட்டுமான வீடுகளுக்கு வரி குறைகிறது சிமென்ட், கட்டுமான வீடுகளுக்கு வரி குறைகிறது ...
சரக்குகளை சோதனை செய்ய அனுமதி ரயில்வேக்கு வணிக வரி துறை கடிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
07:22

ரயிலில் வரும் சரக்குகளை சோதனை செய்ய, ரயில் நிலையங்களுக்குள் சென்று வர, அனுமதி வழங்கக் கோரி, தெற்கு ரயில்வேக்கு, வணிக வரி துறை கடிதம் அனுப்பி உள்ளது.

மாநிலங்களுக்கு இடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான, சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ மூலம் அனுமதி பெற வேண்டும். இதே போன்று, மாநிலத்துக்கு உள்ளே, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல், எடுத்து செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும், ‘இ – வே பில்’ கட்டாயம் பெற வேண்டும்.ஆனால், ரயிலில் எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு, இ – வே பில் பெறுவதில்லை என, புகார் எழுந்தது. இதனால், ரயிலில் வரும் சரக்குகளை சோதனை செய்ய, ரயில்வே துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இது குறித்து, வணிகவரி துறை அதிகாரிகள் கூறியதாவது:வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து, சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் பொருட்கள், இ – வே பில் இல்லாமல் வருகிறது.சமீபத்தில், மும்பையில் இருந்து சென்னைக்கு, 140 பெட்டிகளில் சரக்குகள் வந்தன. இவை முறையான ஆவணங்கள் மற்றும் இ – வே பில் இல்லாமல் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்ய ரயில் நிலையத்துக்குள் சென்ற போது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன.

வணிகவரி அதிகாரிகளால் எளிதில் உள்ளே சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, ரயிலில் வரும் சரக்குகளை சோதனை செய்ய, வணிக வரி அதிகாரிகள் எளிதில் சென்று வர அனுமதி கோரி, தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.இதில், சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கு உள்ளே சென்று வர அனுமதி கோரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)