ரூ.400 கோடி முதலீட்டில் விமான பராமரிப்பு சேவை ரூ.400 கோடி முதலீட்டில் விமான பராமரிப்பு சேவை ...  அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு அன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு ...
வீடு, வாகன கடனுக்கு வட்டி குறையுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
23:33

புதுடில்லி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைக்குமா என்பது இன்று தெரியவரும். இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், இன்று பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 7ம் தேதி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6,25 சதவீதமாக நிர்ணயித்தது.ஆனால் வங்கிகள், அவற்றின் தனிநபர் கடன், வாகன கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியை குறைக்கவில்லை. ஓரிரு வங்கிகள் மட்டுமே, சிறிதளவு வட்டியை குறைத்துள்ளன. எஸ்.பி.ஐ., 0.05 சதவீத அளவிற்கே, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்தது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், சமீபத்தில் பேசிய போது, ‘‘ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டியை குறைத்த உடன், வங்கிகள் அந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது மிகவும் முக்கியம்.’’ என்றார்.

இது குறித்து விவாதிக்க, 21ம் தேதி, பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். அதன்படி, இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், சக்திகாந்த தாஸ், வங்கிகளிடம் வட்டியை குறைக்குமாறு வலியுறுத்துவார் என, தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, வங்கிகள், அவற்றின் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)