பதிவு செய்த நாள்
21 பிப்2019
10:31
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.,21) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. 12 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.48,239 கோடி நிதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்திருப்பதால் வங்கித்துறை பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 8.47 புள்ளிகள் உயர்ந்து 35,764.73 புள்ளிகளாகவும், நிப்டி 6.05 புள்ளிகள் உயர்ந்து 10,741.50 புள்ளிகளாகவும் உள்ளன. சென்செக்ஸ் பொறுத்தவரை ஐசிஐசிஐ வங்கி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.23 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே சமயம் இன்போசிஸ், யெஸ் வங்கி, பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.28 சதவீதம் சரிவடைந்துள்ளன. ஹாங்காங், ஜப்பான், ஷங்காய், அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|