பதிவு செய்த நாள்
23 பிப்2019
02:48
புதுடில்லி: தற்போது, மந்த நிலையில் உள்ள வாகனங்கள் விற்பனை, அடுத்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் அதிகரிக்க துவங்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:அடுத்த நிதியாண்டில் அதாவது, 2019 – -2020ம் ஆண்டின் பிற்பாதியில், இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன விற்பனை, மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.இருப்பினும், விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கும், மாசு உமிழ்வு குறித்த, ‘பாரத் ஸ்டேஜ் – 6’ விதிமுறைகள், விற்பனையை நிர்ணயிக்க கூடியதாக இருக்கும்.பயணியர் வாகனப் பிரிவு, நடப்பு நிதியாண்டின், 10 மாதங்களில், 4 சதவீத வளர்ச்சியை கண்டது. அடுத்த நிதியாண்டில், இது மிதமான வளர்ச்சியை பெறும்.‘பி.எஸ்., – 6’ விதிமுறை அறிமுகமாகும்பட்சத்தில் விலை ஏறும் வாய்ப்பிருப்பதால், அதற்கு முன்னதாக வாகனத்தை வாங்க விரும்பும் மனவோட்டம், புதிய மாடல்கள் வருகை ஆகியவை, பயணியர் வாகனப் பிரிவின் விற்பனை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின், 10 மாதங்களில், 23 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இது, அடுத்த நிதியாண்டில், அதிகபட்ச ஒற்றை இலக்க வளர்ச்சியை பெறும்.தொழில் துறை செயல்பாடுகள் அதிகரித்து வருவது, உள்கட்டமைப்பு வளர்ச்சி போன்றவை இப்பிரிவு வாகன விற்பனை மற்றும் தேவைக்கான காரணிகளாக அமையும்.இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, அடுத்த நிதியாண்டிலும் நிலையான வளர்ச்சியை எட்டும். நடப்பு நிதியாண்டில், இரு சக்கர வாகனப் பிரிவு, 8 சதவீதம் அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளது.இப்பிரிவை பொறுத்தவரை, கிராமப்புற மக்களின் வருமான உயர்வு, அதிகரித்து வரும் மத்திய தர குடும்பத்தினர் எண்ணிக்கை உள்ளிட்டவை, விற்பனை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.‘பி.எஸ்., – 6’ விதிமுறை அறிமுகமாகும் காரணத்தால், 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், வாகனங்கள் விலை அதிகரிக்கும்.வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கணிப்புப்படி, பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர மற்றும் பயணியர் வாகனங்கள் விலை, 10 முதல், 15 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.டீசல் வாகனங்களை பொறுத்தவரை, 20 முதல், 25 சதவீதம் வரை அளவுக்கு விலையேற வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு இந்தியா ரேட்டிங்க்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|