பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம் : ரூபாயின் மதிப்பு உயர்வுபங்குச்சந்தைகளில் தள்ளாட்டம் : ரூபாயின் மதிப்பு உயர்வு ...  நுண்கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது நுண்கடன் வழங்குவது அதிகரித்து வருகிறது ...
வாகனங்கள் விற்பனை இனி அதிகரிக்குமா? : ‘இந்தியா ரேட்டிங்க்ஸ்’ ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
02:48

புதுடில்லி: தற்போது, மந்த நிலையில் உள்ள வாகனங்கள் விற்பனை, அடுத்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் அதிகரிக்க துவங்கும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:அடுத்த நிதியாண்டில் அதாவது, 2019 – -2020ம் ஆண்டின் பிற்பாதியில், இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன விற்பனை, மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.இருப்பினும், விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கும், மாசு உமிழ்வு குறித்த, ‘பாரத் ஸ்டேஜ் – 6’ விதிமுறைகள், விற்பனையை நிர்ணயிக்க கூடியதாக இருக்கும்.பயணியர் வாகனப் பிரிவு, நடப்பு நிதியாண்டின், 10 மாதங்களில், 4 சதவீத வளர்ச்சியை கண்டது. அடுத்த நிதியாண்டில், இது மிதமான வளர்ச்சியை பெறும்.‘பி.எஸ்., – 6’ விதிமுறை அறிமுகமாகும்பட்சத்தில் விலை ஏறும் வாய்ப்பிருப்பதால், அதற்கு முன்னதாக வாகனத்தை வாங்க விரும்பும் மனவோட்டம், புதிய மாடல்கள் வருகை ஆகியவை, பயணியர் வாகனப் பிரிவின் விற்பனை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின், 10 மாதங்களில், 23 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இது, அடுத்த நிதியாண்டில், அதிகபட்ச ஒற்றை இலக்க வளர்ச்சியை பெறும்.தொழில் துறை செயல்பாடுகள் அதிகரித்து வருவது, உள்கட்டமைப்பு வளர்ச்சி போன்றவை இப்பிரிவு வாகன விற்பனை மற்றும் தேவைக்கான காரணிகளாக அமையும்.இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, அடுத்த நிதியாண்டிலும் நிலையான வளர்ச்சியை எட்டும். நடப்பு நிதியாண்டில், இரு சக்கர வாகனப் பிரிவு, 8 சதவீதம் அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளது.இப்பிரிவை பொறுத்தவரை, கிராமப்புற மக்களின் வருமான உயர்வு, அதிகரித்து வரும் மத்திய தர குடும்பத்தினர் எண்ணிக்கை உள்ளிட்டவை, விற்பனை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.‘பி.எஸ்., – 6’ விதிமுறை அறிமுகமாகும் காரணத்தால், 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், வாகனங்கள் விலை அதிகரிக்கும்.வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கணிப்புப்படி, பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர மற்றும் பயணியர் வாகனங்கள் விலை, 10 முதல், 15 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.டீசல் வாகனங்களை பொறுத்தவரை, 20 முதல், 25 சதவீதம் வரை அளவுக்கு விலையேற வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு இந்தியா ரேட்டிங்க்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)