தேவை குறைவால் தங்கம் விலை சரிவு தேவை குறைவால் தங்கம் விலை சரிவு ...  இந்தியாவில் முதலீடு செய்ய  ‘ஏஷியான்’ நிறுவனங்களுக்கு அழைப்பு இந்தியாவில் முதலீடு செய்ய ‘ஏஷியான்’ நிறுவனங்களுக்கு அழைப்பு ...
சந்தா கோச்சார், ‘தேடப்படும் நபர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
02:51

புதுடில்லி: ‘வீடியோகான்’ நிறுவனத்திற்கு, விதிகளை மீறி, வங்கி கடன் வழங்கியது தொடர்பான வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான, சந்தா கோச்சாரை, ‘தேடப்படும் நபர்’ என, சி.பி.ஐ., அறிவித்துள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் இருந்த போது, 2012ம் ஆண்டில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.இதன் மூலம் அவரது கணவரும், உறவினர்களும் பயனடைந்ததாகவும் புகார் கூறப்பட்டது.இதையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாகம், முன்னாள் நீதிபதி, ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில், தனி விசாரணைக்கு உத்தரவிட்டது.கடந்த ஆண்டு, அக்டோபரில், ஐ,.சி.ஐ.சி..ஐ., வங்கி பதவியை, சந்தா கோச்சார் ராஜினாமா செய்தார். ஸ்ரீ கிருஷ்ணா குழு, சந்தா கோச்சார், வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்திற்கு, கடன் வழங்க ஒப்புதல் அளித்தார் என தெரிவித்ததால், சந்தா கோச்சாரின் ராஜினாமாவை, பதவி நீக்கமாக மாற்ற, இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.இதற்கிடையே, சி.பி.ஐ., இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வந்ததுகடந்த மாதம், வீடியோகான் நிறுவன தலைவர், வேணுகோபால் துாத், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.வீடியோகான் நிறுவன தலைவர், வேணுகோபால் துாத், தீபக் கோச்சார் ஆகியோரை தேடப்படும் நபர்களாக, சி.பி.ஐ., அறிவித்திருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சந்தா கோச்சாரை தேடப்படும் நபராக, சி.பி.ஐ., நேற்று அறிவித்தது. வேணுகோபால் துாத், தீபக் கோச்சார் ஆகியோரை தேடப்படும் நபர்களாக, சி.பி.,ஐ., மீண்டும் அறிவித்துள்ளது.இதையடுத்து, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லவிடாமல் தடுக்க, விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, சி.பி.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், ‘வழக்கு பதிவு செய்த பின், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனையில், கிடைத்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன’ என, சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)