கூகுள் கேமிங் கூகுள் கேமிங் ...  நெருக்கடியிலிருந்து மீளும்  ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் நெருக்கடியிலிருந்து மீளும் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் ...
தண்ணீர் தட்டுப்பாட்டால் கோழி பற்றாக்குறை கூடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
23:23

நாமக்கல்: வெயில் தாக்கம், தண்ணீர் தட்டுப்பாடு, தீவனம் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், முட்டைக்கோழிகளை, 10 வாரத்துக்கு முன் விற்பனை செய்யும் நிலைக்கு, பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும். அதன் பின், இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, ‘நெக்’ வியாபாரிகள் முடிவு செய்வர். பிப்., 1ல், 62 ரூபாய், 2ல், 59; 9ல், 64; 19ல், 62 ரூபாய் என, விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.கடந்த, 21ல், 59 ரூபாய் என, விலை குறைக்கப்பட்டது. உற்பத்தி செலவை காட்டிலும், குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதுடன், கொள்முதல் விலையிலிருந்து, 14 ரூபாய் குறைத்து, வியாபாரிகள், முட்டைக்கோழிகளை வாங்குவதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:முட்டைக்கோழிகள், கர்நாடகாவுக்கு, 60, கேரளாவுக்கு, 40 சதவீதம் விற்பனை செய்யப்படுகின்றன. முட்டை விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும்.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தீவனம் விலை உயர்வால், 85 வாரத்தில் விற்பனை செய்யும் கோழிகளை, 70, 75 வாரத்திலேயே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், கோழிகளுக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். அவற்றை கருத்தில் கொண்டும், 10 வாரத்துக்கு முன்னதாகவே, கோழிகளை விற்பனை செய்யும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.வியாபாரிகளும், நெக் நிர்ணயித்துள்ள விலையில் இருந்து, 14 ரூபாய் குறைத்து, கோழிகளை கொள்முதல் செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)