தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 சரிவு ...  ஸ்டெர்லைட் ஆலை  புதிய சி.இ.ஓ., நியமனம் ஸ்டெர்லைட் ஆலை புதிய சி.இ.ஓ., நியமனம் ...
நேரடி வரி வருவாய் இலக்கு எட்டப்படுமா?முன்கூட்டிய வரி வசூலிப்பில் அரசு தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
23:17

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் குறைந்துள்ளதால், நிர்ணயித்த இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஒரு நிறுவனம் அல்லது தனி நபர் ஈட்டும் வருவாய் அடிப்படையில் செலுத்தும் வரி, நேரடி வரி எனப்படுகிறது.இந்த வகையில், நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், நேரடி வரிகள் மூலம், 11.50 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இது, கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய இடைக்கால பட்ஜெட்டில், 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.


ஆனால், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - ஜனவரி வரையிலான, 10 மாதங்களில், 7.89 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத் தான், வரி வசூலாகியுள்ளது.இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரி வசூல் குறைவாக உள்ளதால், சமீபத்தில், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், பி.சி.மோடி தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.


அதில், நடப்பு நிதியாண்டின், நான்காம் காலாண்டிற்கு, நிறுவனங்களின் முன்கூட்டிய வரி வசூல் நடவடிக்கையை முடுக்கி விட முடிவு செய்யப்பட்டது.அத்துடன், குறிப்பிட்ட வரம்பின் கீழ் வரும், வரி செலுத்துவோர் அனைவருக்கும், முன்கூட்டிய வரியை விரைந்து செலுத்துமாறு கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.


அதன்படி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தும் மாத ஊதியம் பெறுவோருக்கு, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்கள், கடைசி தவணை என்பதால், அதிக அளவில் முன்கூட்டிய வரி செலுத்தி, அடுத்த நிதியாண்டில், கழிவு போக எஞ்சிய தொகையை திரும்பப் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், வரி வசூல் இலக்கிற்கும், திரட்டப்படும் தொகைக்கும் உள்ள இடைவெளி குறைவாகவே இருக்கும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


மறைமுக வரி வசூல்



நடப்பு நிதியாண்டில், சுங்கம், ஜி.எஸ்.டி., ஆகிய மறைமுக வரிகள் மூலம், 7.43 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, மத்திய இடைக்கால பட்ஜெட்டில், மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதன்படி, சுங்க வரி வசூல் இலக்கு, 1.12 லட்சம் கோடியில் இருந்து, 1.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், ஜி.எஸ்.டி., வசூல் இலக்கு, 7.43 லட்சம் கோடியில் இருந்து, 6.43 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., 7.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)