நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்., ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டம் நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல்., ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டம் ...  புதிய தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்:தீர்வு காண தவறினால் வரும் தலைமுறை பாதிக்கும் புதிய தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்:தீர்வு காண ... ...
‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்கு ஆலோசனை அதிகாரிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
23:30

‘ஜிம் – 2’ எனும் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்களின் ஆலோசனைகளுக்கான, நோடல் அதிகாரிகளாக, 15க்கும் மேற்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அரசு சார்பில், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டில், 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதன் வழியாக, 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.


மாநாட்டில் புரிந்துணர்வு செய்த நிறுவனங்கள் தொழில் துவங்க, அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்க, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, தமிழக அரசு நியமித்துள்ளது. தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:


ஜிம் – 2 மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிறுவனங்கள் விரைவில் தொழில் துவங்குவதற்கு, தேவையான வசதிகளையும், அவர்கள் தொடர்பு கொள்வதற்கான அதிகாரிகளையும், தமிழக அரசு நியமித்துள்ளது.


இதில், ராஜேஷ் லக்கானி, சபிதா, நஜுமுதீன், கிருஷ்ணா உட்பட, 15க்கும் மேற்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும், 5, 9, 10 என, நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி, விரைவில் தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)