நாட்டின் ஏற்றுமதி உயர்வு வர்த்தக பற்றாக்குறை சரிவு நாட்டின் ஏற்றுமதி உயர்வு வர்த்தக பற்றாக்குறை சரிவு ... 'பரஸ்பர வர்த்தக பிரச்னையை பேசி தீர்க்கலாம்': இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அழைப்பு 'பரஸ்பர வர்த்தக பிரச்னையை பேசி தீர்க்கலாம்': இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ... ...
ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோர் பெற நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2019
05:04

கோல்கட்டா: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், பொருட்களின் விலையை குறைத்தோ அல்லது அளவை அதிகரித்தோ, ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோருக்கு வழங்க, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமான, என்.ஏ.ஏ., அனுமதி வழங்கியுள்ளது.ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017, ஜூலை, 1ல் அறிமுகமானது. இதன் மூலம், பல முனை வரிகள் ஒழிந்து, நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த முறையில், தயாரிப்பு நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை, உள்ளீட்டு வரிப் பயனாக திரும்பப் பெறுகின்றன.அவ்வாறு பெறும் ஆதாயத்தின் அடிப்படையில், அவை தயாரிக்கும் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.அவ்வாறு குறைக்காமல், பழைய விலையிலேயே பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது, என்.ஏ.ஏ., சட்ட நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கிறது.

இந்நிலையில், என்.ஏ.ஏ., தலைவர், பி.என்.சர்மா கூறியதாவது:இருநுாறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. அதன் பயனை, தயாரிப்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். ஆனால், ஷாம்பூ போன்ற சிறிய, 'சாஷே'க்களில் அடைத்து விற்கப்படும், குறைந்த விலை பொருட்களில், இதை நடைமுறைப்படுத்துவது கடினம்.அதனால், பொருட்கள் அளவை அதிகரித்துக்கொள்ள, நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட பின், அதன் பயன், நுகர்வோரை சென்றடைகிறதா என்பதை, மூன்று அளவுகோல்களின் அடிப்படையில், ஆணையம் கண்காணித்து வருகிறது.அதன்படி, வரி குறைக்கப்பட்ட பின் கிடைத்த பயனுக்கு ஏற்ப, பொருட்கள் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதா என, ஆராயப்படுகிறது.

வரி குறைப்பு பயனை, நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்க எடுத்துக் கொள்ளும் காலம் கண்காணிக்கப்படுகிறது. நிறுவனம், நுகர்வோருக்கு அளிக்கும் கூடுதல் சலுகைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)