‘மாருதி சுசூகி’ நிறுவனம் வாகன உற்பத்தி குறைப்பு ‘மாருதி சுசூகி’ நிறுவனம் வாகன உற்பத்தி குறைப்பு ...  பங்கு வெளியீட்டுக்கு வரும்  ‘டிரான்ஸ் ஆசியா’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘டிரான்ஸ் ஆசியா’ நிறுவனம் ...
‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் விற்பனை மாதம் சராசரியாக 50 ஆயிரம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2019
23:29

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில், மாதந்தோறும்சராசரியாக, 50 ஆயிரம், பி.ஓ.எஸ்., எனும், ஏ.டி.எம்., மற்றும் ‘கிரெடிட் கார்டு ஸ்வைப் பிங்’ இயந்திரங்கள், வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்றன.

நாடு முழுவதும் ரொக்க பரிவர்த்தனை என்பது, குறைந்து வருகிறது. தற்போது சாமானியர்கள் கூட, ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, கார்டு மூலமாக பணம் செலுத்த துவங்கி உள்ளனர்.வங்கிகளும், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்த, தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்துடன் நில்லாமல், கடைகள், வணிக வளாகங்களில், ஏ.டி.எம்., கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக, பணம் செலுத்துவதற்கான, கார்டு ஸ்வைப்பிங் இயந்திரங்களும் அதிகளவில் வங்கிகளால் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும், சராசரியாக, 50 ஆயிரம் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாக, ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில், 35.10 லட்சம்; டிசம்பரில், 35.95 லட்சம்;நடப்பாண்டு ஜனவரியில்,36.53 லட்சம் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பிரிவே, பி.ஓ.எஸ்., வழங்குவது. இதன் வாயிலாக வணிகர்களின் வியாபாரம் அதிகமாகும். வங்கிகளுக்கு அவர்களின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் வருவாயாக கிடைக்கும்.சிறிய பெட்டிக் கடைகளுக்கும் இந்த இயந்திரம் வழங்கலாம் என்பதால், தற்போது இயந்திரத்தின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)