பங்கு வெளியீட்டுக்கு வரும்  ‘டிரான்ஸ் ஆசியா’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘டிரான்ஸ் ஆசியா’ நிறுவனம் ...  இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்; ரியல் எஸ்டேட் வரி அமலாக்கம் ஆய்வு இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்; ரியல் எஸ்டேட் வரி அமலாக்கம் ஆய்வு ...
தண்டனையில் இருந்து தப்பினார் அனில் அம்பானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2019
23:34

புதுடில்லி: எரிக்சன் நிறுவன வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 459 கோடி ரூபாய் செலுத்தி, சிறை செல்வதை தவிர்த்தார், அனில் அம்பானி.

அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ நிறுவனம், தொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில், ஸ்வீடனைச் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இத்தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தரவில்லை. அதனால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

அதில், ‘ஏற்கனவே கோர்ட்டில் டிபாசிட் செய்த, 118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன் நிறுவனத்திற்கு, 459 கோடி ரூபாய் வழங்க தவறினால், அனில் அம்பானி மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என, பிப்., 20ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, கூடுதலாக செலுத்திய, 260 கோடி ரூபாய் வரியை, திரும்பத் தர, வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, அம்பானி கோரினார்.இதற்கு, கடன் தந்த வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அம்பானி மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு அளித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, அனில் அம்பானி, கோர்ட் உத்தரவுப்படி, பணம் செலுத்துவாரா அல்லது பணம் செலுத்த முடியாமல் சிறை செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், நேற்றிரவு ரிலையன்ஸ் குழுமம், எரிக்சனுக்கு செலுத்த வேண்டிய, 459 கோடி ரூபாயை செலுத்தி, அனில் அம்பானியை நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)