தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு ...  சிறு நிறுவனங்கள் வளர்ச்சி கருத்து கேட்கும் ஆர்.பி.ஐ., சிறு நிறுவனங்கள் வளர்ச்சி கருத்து கேட்கும் ஆர்.பி.ஐ., ...
‘மைன்ட்ரீ நிறுவனத்தை இணைக்க மாட்டோம்’; எல்., அண்டு டி., நிறுவனம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
23:22

மும்பை: ‘தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, ‘மைன்ட்ரீ’ நிறுவனத்தை இணைத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை’ என, எல்., அண்டு டி., நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம், எல்., அண்டு டி., நிறுவனம், மைன்ட்ரீ நிறுவனத்தின், 67 சதவீத பங்குகளை, 10 ஆயிரத்து, 733 கோடி ரூபாய் முதலீட்டில் வாங்குவதாக அறிவித்தது.அன்றே, ‘கேப் காபி டே’ நிறுவனர், வி.ஜி.சித்தார்த்திடம் இருந்து, மைன்ட்ரீ நிறுவனத்தின், 20.3 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. பங்கு ஒன்றின் விலை, 980 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது, சந்தை விலையை விட, 20 ரூபாய் அதிகம்.அத்துடன், பங்கு தரகர்களிடம் இருந்து, மைன்ட்ரீ நிறுவனத்தின், 15 சதவீதபங்குகளை, இதே விலைக்கு வாங்கவும், எல்., அண்டு டி., ஒப்பந்தம் செய்தது. இது தவிர, வெளிச் சந்தையில், இதே விலைக்கு, 32 சதவீத பங்குகள் வாங்கப்படும் எனவும் அறிவித்தது.

அதிர்ச்சி:
இதனால், மைன்ட்ரீ நிறுவனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ‘கடந்த, 20 ஆண்டுகளாக சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட நிறுவனத்தை, எல்., அண்டு டி., திடீரென கையகப்படுத்துவதை ஏற்க முடியாது‘இது, ஐ.டி., துறைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தல். இதனால், மைன்ட்ரீ நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகள் மாறும்; பங்கு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவர்’ என, அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில் நேற்று, எல்., அண்டு டி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, எஸ்.என்.சுப்ரமணியன் கூறியதாவது:மூன்று மாதங்களுக்கு முன், சித்தார்த் எங்களை அணுகி, பங்குகளை விற்பதாக கூறினார். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். மைன்ட்ரீ நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், எங்களுடன் நட்புடன் உள்ளனர்.மைன்ட்ரீ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கினாலும், அதன் செயல்பாடுகளில், எல்., அண்டு டி., தலையிடாது. தற்போது அந்நிறுவனத்தை, எல்., அண்டு டி., நிறுவனத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மைன்ட்ரீ எப்போதும் போல சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எல்., அண்டு டி., குழுமம், பொறியியல், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது. அதில், எல்., அண்டு டி., இன்போடெக் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துடன், சில காலம் கழித்து, மைன்ட்ரீ இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உழைப்பால் உயர்ந்த மதிப்பு:

‘இன்போசிஸ், விப்ரோ, லுசன்ட்’ போன்ற, ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றிய சிலர் இணைந்து, 1999ல், ‘மைன்ட்ரீ’ நிறுவனத்தை உருவாக்கினர். 11 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது, 14 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தை துவக்கி, முதல் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்த, அசோக் சூட், 2011ல், பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினார். தற்போது நிறுவனர்கள் வசம், 13 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)