‘மைன்ட்ரீ நிறுவனத்தை இணைக்க மாட்டோம்’; எல்., அண்டு டி., நிறுவனம் அறிவிப்பு ‘மைன்ட்ரீ நிறுவனத்தை இணைக்க மாட்டோம்’; எல்., அண்டு டி., நிறுவனம் அறிவிப்பு ...  ரியல் எஸ்டேட் வரி குறைப்பு; ஏப்., 1ல் அமல் ரியல் எஸ்டேட் வரி குறைப்பு; ஏப்., 1ல் அமல் ...
சிறு நிறுவனங்கள் வளர்ச்சி கருத்து கேட்கும் ஆர்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
23:23

மும்பை: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வ கருத்துகளை தெரிவிக்கலாம் என, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கவும், அவற்றின் தர நிர்ணயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், உயர்மட்டக் குழுவை, ரிசர்வ் வங்கி அமைத்து உள்ளது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணைய தலைவர், யு.கே.சின்கா தலைமையிலான இக்குழு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் மேம்பாட்டிற்கு, அனைத்து தரப்பினரின் கருத்தை கோரியுள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: முதலீடு அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவது தொடர்பான கருத்துகளை தெரிவிக்குமாறு, அத்துறை சார்ந்தோர் கோரப்படுகின்றனர்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள், பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கான தீர்வுகளையும் தெரிவிக்கலாம்.

அத்துடன், இத்துறையின் கடன் மதிப்பீட்டிற்கான தர நிர்ணய செயல்முறைகள் குறித்த யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட தொழில் மையங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன் பெற்றனவா என்பது குறித்தும், தொழில் கூட்டமைப்புகள், உயர்மட்டக் குழுவிடம் தெரிவிக்கலாம்.

ரிசர்வ் வங்கி வலைதளத்தில், வரும், 28ம் தேதிக்குள், கருத்துகளை பதிவு செய்யலாம். அவற்றின் அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்களை, சின்கா குழு உருவாக்கி, ஜூன் மாதத்திற்குள் அறிக்கை வழங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)