சிறு நிறுவனங்கள் வளர்ச்சி கருத்து கேட்கும் ஆர்.பி.ஐ., சிறு நிறுவனங்கள் வளர்ச்சி கருத்து கேட்கும் ஆர்.பி.ஐ., ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
ரியல் எஸ்டேட் வரி குறைப்பு; ஏப்., 1ல் அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
23:27

புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ள புதிய வரி விகிதம் தொடர்பான விதிமுறைகளுக்கு, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஏப்., 1 முதல், ரியல் எஸ்டேட் துறைக்கான, ஜி.எஸ்டி.,யை குறைக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 34வது கூட்டம், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், ஏப்., 1 முதல், கட்டுமான நிறுவனங்கள்,புதிய, ஜி.எஸ்.டி.,க்கு மாறுவது தொடர்பான விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

வரி சுமை குறையும்:
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதுபோல, குறைந்த விலை வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய கூட்டத்தில், கட்டுமான நிறுவனங்கள், புதிய வரி விகிதங்களுக்கு மாறுவது தொடர்பான நடைமுறைகள் குறித்து விவாதித்து, ஒப்புதல் வழங்கப்பட்டது.ஏப்., 1ல் புதிய விதிமுறைகளுடன், குறைக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது.

கட்டுமான நிறுவனங்கள் விரும்பினால், தற்போது நடைபெற்று வரும் கட்டுமான திட்டங்களை, புதிய வரி திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.புதிய விதிமுறையின்படி, ஏப்ரல் முதல் கட்டுமான நிறுவனங்கள், செங்கல், சிமென்ட் போன்ற மூலப்பொருட்களில், 80 சதவீதத்தை, பதிவு பெற்ற முகவர்களிடம் தான் கொள்முதல் செய்ய வேண்டும்.வணிக வளாகங்களில், 15 சதவீத பரப்பு, குடியிருப்பாக வகைப்படுத்தி, அதற்கேற்ப, ஜி.எஸ்.டி., கணக்கிட வேண்டும் என, விதிமுறை கூறுகிறது. இதனால், கட்டுமான நிறுவனங்களுக்கு, வணிக வளாக திட்டங்களுக்கான வரிச் சுமை குறையும்.

உள்ளீட்டு வரி:

குறைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தின்படி, கட்டுமான நிறுவனங்கள், உள்ளீட்டு வரிப் பயனை பெற முடியாது. இது, ஏப்ரலில் துவங்கும் கட்டுமான பணிகளுக்கு பொருந்தும்.அதேசமயம், ஏற்கனவே நடைபெற்று வரும் குடியிருப்பு பணிகள் தொடர்பான உள்ளீட்டு வரிப் பயனை, கட்டுமான நிறுவனங்கள் பெறுவதற்கு, வழி வகை செய்யப்பட்டுள்ளது.

விகிதாச்சார முறையில் இப்பயனை கட்டுமான நிறுவனங்கள் பெறலாம் என, விதிமுறை கூறுகிறது. இந்த அம்சம் குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் மேலும் தெளிவுபடுத்தும் என, தெரிகிறது.பழைய குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளீட்டு வரிப் பயன் கிடைக்கும் அதேவேளையில், புதிய திட்டங்களுக்கு, குறைக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. இதனால், கட்டுமான நிறுவனங்கள், வீடு வாங்குவோர் என, இரு தரப்பினரும் பயன் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

குடியிருப்பு மதிப்பு:
பெருநகரங்கள் மற்றும் நகரங்களில், 45 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகள், குறைந்த விலை குடியிருப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு, ‘கார்பெட் ஏரியா’ எனப்படும், புழங்கும் பகுதி முறையே, 90 மற்றும் 60 சதுர மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)