பதிவு செய்த நாள்
20 மார்2019
11:15
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 80.70 புள்ளிகள் உயர்ந்து 38,444.17ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 11.35 புள்ளிகள் உயர்ந்து 11,543.75ஆகவும் வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கமான சூழல் இருந்தபோதும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதன் எதிரொலியாகவும், முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ.69.15ஆக வர்த்தகமானது. நான்கு மாதங்களுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், டாலரின் தேவை உலகளவில் அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|