‘ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை’‘ஜி.எஸ்.டி., போன்ற அமைப்புகள் தேவை’ ...  ‘டொயோட்டா’ தயாரிப்பில் ‘மாருதி’ நிறுவனத்தின் கார் ‘டொயோட்டா’ தயாரிப்பில் ‘மாருதி’ நிறுவனத்தின் கார் ...
ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு; மீண்டும் மோடி ஆட்சி எதிர்பார்ப்பில் குவியும் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2019
23:18

புதுடில்லி: கடந்த ஒரு மாதத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஆசியாவின் இதர கரன்சிகளை விட அதிகமாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என, கருத்துக் கணிப்புகள் வெளியானதால், அன்னியச் செலாவணி, பங்குச் சந்தை ஆகியவை ஏற்றம் கண்டு வருகின்றன.

இது குறித்து, ‘புளும்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 2018 ஆகஸ்ட் முதல் சரிவடைந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில், ரூபாய் மதிப்பு, ஆசியாவின் இதர கரன்சிகளை விட அதிகரித்துள்ளது.இதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, 273 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பார் என, வெளியான இரு நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் தான் காரணம்.

பங்குகள்:
இதன் விளைவாக, பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் அன்னிய முதலீடுகள் குவிந்து வருகின்றன.ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சில நாடுகளின் மத்திய வங்கிகள், பணவாட்டத்தை கட்டுப்படுத்த, வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாகவும், இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் டாலரில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.கடந்த, 18ம் தேதி நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில், 330 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர். கடன் பத்திர முதலீடுகளில், 140 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.அதிக அளவில் டாலர் குவிந்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்டுக்கு பின், ரூபாய் மதிப்பு, புதியஉச்சத்தை எட்டியுள்ளது.தொடர்ந்து, ஏழு வர்த்தக தினங்களாக உயர்ந்து வந்த ரூபாய் மதிப்பு, லாப நோக்கில் பங்குகள் விற்கப்பட்டதால், இரு தினங்களாக சற்று சரிவை சந்தித்தன.

முன்பேர வர்த்தகம்:
அன்னியச் செலாவணி முன்பேர வர்த்தகத்தில், 2018, செப்டம்பருக்கு பின், சரிந்து வந்த ரூபாய் மதிப்பு, ஏப்ரல் மாதத்திற்கான வாங்கும் விலையை விட, 0.19 சதவீதம் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தின் அடிப்படையில் கணிக்கும் விலை, கடந்த வாரம் வர்த்தக இறுதி நாளன்று, 5.87 சதவீதம் குறைந்தது. அதனால், குறுகிய காலத்திற்கு, ரூபாய் மதிப்பு மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 0.15 காசுகள் குறைந்து, 68.81ல் நிலை கொண்டது. இந்தாண்டு பிப்., 13ல், ரூபாய் மதிப்பு, அதிகபட்சமாக, 70.86ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உயரும்:
அதிக வருவாய் ஈட்டும் நோக்கில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.இரண்டாவது முறையாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச நிதி நிலவரம் போன்றவற்றால், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம், ரூபாய் மதிப்பு, 67 ஆக உயரக் கூடும்.– ஸ்காடியா வங்கி, சிங்கப்பூர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)