பதிவு செய்த நாள்
21 மார்2019
23:23
புதுடில்லி: ‘டொயோட்டா’ நிறுவனம், அதன் பெங்களூரு தொழிற்சாலையில், ‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் மேம்பட்ட வடிவமைப்பிலான, ‘விட்டாரா பிரெஸ்ஸா’ கார்களை, 2022ல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்திற்கும், சுசூகி நிறுவனத்திற்கும், 2017, பிப்., 6ல் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘விட்டாரா பிரெஸ்ஸா’ தயாரிக்கப்படுகிறது.இரு நிறுவனங்கள் இணைந்து, புதிய வடிவமைப்பில், மேம்பட்ட தொழில்நுட்பத்தில், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தயாரித்து, விற்பனை செய்ய உள்ளன.
டொயோட்டா நிறுவனத்திற்காக, கார்களை வடிவமைக்கும் பொறுப்பை, சுசூகி ஏற்கும். தற்போது சந்தையில் உள்ள, விட்டாரா பிரஸ்ஸா, 2016, மார்ச்சில் அறிமுகமானது. அதனால், மேம்பட்ட வடிவமைப்புடன், நவீன தொழில்நுட்பத்தில், இதே பெயரில் புதிய கார், 2022ல் அறிமுகமாக உள்ளது. இந்த கார்களில், மாருதியும், டொயோட்டாவும் உருவாக்கிய இன்ஜின்கள் பொருத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|