‘டொயோட்டா’ தயாரிப்பில் ‘மாருதி’ நிறுவனத்தின் கார் ‘டொயோட்டா’ தயாரிப்பில் ‘மாருதி’ நிறுவனத்தின் கார் ... சந்தாதாரர் எண்ணிக்கை 120 கோடி ஆனது; ‘ஆர்ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல்’ முன்னணி சந்தாதாரர் எண்ணிக்கை 120 கோடி ஆனது; ‘ஆர்ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல்’ ... ...
டாலர், யூரோ மதிப்பு சரிவு; திருப்பூர் நிறுவனங்களுக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2019
23:25

திருப்பூர்: ரூபாய்க்கு நிகரான டாலர், யூரோ மதிப்புகள் சரிவடைந்து வருவதால், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

டாலர், யூரோ, பவுண்டு உள்ளிட்ட அன்னிய பண மதிப்புகளில் ஏற்படும் ஏற்ற, இறக்கம், நம் நாட்டு ஏற்றுமதி துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த, 2018 ஏப்ரல் மாதம், 65 ரூபாயாக இருந்த டாலர் மதிப்பு படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் மாதம், 72.60 ரூபாயாக காணப்பட்டது.

எதிர்பாராத விதமாக, இம்மாத துவக்கம் முதல், டாலர் மதிப்பு மெதுவாக சரிவை நோக்கி செல்லத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, டாலர் மதிப்பு, 68.56 ரூபாயாக குறைந்து காணப்பட்டது.டாலர் போன்றே யூரோ மதிப்பும் சரிந்து வருகிறது. கடந்த, 2018 டிசம்பர் மாதம், 82.25 ரூபாயாக இருந்த யூரோ மதிப்பு, குறைந்து கொண்டே வந்து நேற்று, 78.19 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது.

இரு நாட்டு பண மதிப்பில் ஏற்பட்டு வரும் சரிவுநிலை, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆடைகளுக்கு கிடைக்கும் தொகை குறைவதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர், கிரீஷ் கூறியதாவது:அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதால், இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது; டாலர், யூரோ மதிப்புகள் குறைந்து வருகின்றன. மிக குறுகிய காலத்தில், இவ்விரு பண மதிப்புகளும், 5 சதவீதம் சரிந்துள்ளன.

டாலர் மதிப்பு, 65 ரூபாயாகவும்; யூரோ மதிப்பு, 75.25 ரூபாயாகவும் குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது. அன்னிய பண மதிப்பு சரிவு, ஏற்றுமதியாளர் வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும். வங்கிகள் வழங்கும், ‘பார்வேர்டு புக்கிங்’ பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்திய ஏற்றுமதி நிறுவனங்கள், வருவாய் இழப்பு ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளும்; மற்ற நிறுவனங்களுக்கு, ஏற்றுமதியில் கிடைக்கும் தொகையில், 5 சதவீதம் இழப்பு ஏற்படும்.

இறக்குமதியாளர்களுக்கு, அன்னிய பண மதிப்பு சரிவு சாதகமானதாக அமைகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மெஷின்களின் விலை, 5 சதவீதம் குறையும்.லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் காலங்களில் ரூபாய் மதிப்பில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். எனவே, புதிய ஆர்டர்களை பெறும்போது, ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், வங்கிகள் வழங்கும், ‘பார்வேர்டு கான்ட்ராக்ட்’ போன்ற பாதுகாப்பு அம்சங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, கிரீஷ் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)