தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி உரிமம்; வலைதளம் மூலம் சுலபமாக பெறும் வசதி அறிமுகம்தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி உரிமம்; வலைதளம் மூலம் சுலபமாக ... ...  ஜெட் ஏர்வேசுக்கு கரிசனம் காட்டுவது ஏன்? வங்கிகள் கூட்டமைப்பிற்கு விஜய் மல்லையா கேள்வி ஜெட் ஏர்வேசுக்கு கரிசனம் காட்டுவது ஏன்? வங்கிகள் கூட்டமைப்பிற்கு விஜய் ... ...
‘ஜெட் ஏர்வேஸ்’ தலைவர் நரேஷ் பதவி விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
07:10

புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா கோயலுடன் இணைந்து, 1993ல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை துவக்கினார்.

இந்நிறுவனத்தில், நரேஷ் கோயலுக்கு, 51 சதவீதம்; அபுதாபியின், ‘எதியாட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு, 24 சதவீத பங்கு மூலதனம் உள்ளது.கடும் போட்டி காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஜெட் ஏர்வேஸ் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், விமானிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது.

அதேசமயம், இந்நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி கடன் வழங்கிய வங்கிகளும், நெருக்கடி கொடுத்தன. இதையடுத்து, கடன் தீர்வு திட்டத்தை, எஸ்.பி.ஐ,. தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு உருவாக்கியது.அதன்படி, நரேஷ் கோயல் பதவி விலகி, பங்கு மூலதனத்தை, 10 சதவீதமாக குறைத்துக் கொண்டால், மேற்கொண்டு, 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்து, நிறுவனத்திற்கு உயிர் கொடுக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.

இதையேற்று, நேற்று நடைபெற்ற, ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழு கூட்டத்தில், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, நரேஷ் கோயல் தெரிவித்தார். அவர் மனைவியும், இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார்.இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பு, ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுவில், இருவரை நியமிக்க உள்ளது. அத்துடன், இடைக்கால நிர்வாகக் குழு அமைத்து, அன்றாட விமான சேவைகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளது.இந்த தகவல் வெளியானதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கின் விலை, 15 சதவீதம் உயர்ந்து, 260 ரூபாயில் நிலை கொண்டது.

வளைக்கும் நிறுவனங்கள்
ஊதியம் கிடைக்காத அதிருப்தியில் உள்ள, ஜெட் ஏர்வேஸ் விமானிகளை, வளைத்துப் போட, ‘இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனங்கள் தீவிரமாக முயன்று வருகின்றன.ஸ்பைஸ்ஜெட், இரண்டு மாத அடிப்படை ஊதியத்துடன், பணிபுரிய விரும்பும் நகரங்களை தேர்வு செய்யும் வசதியை, விமானிகளுக்கு வழங்குவதாக கூறியுள்ளது. இண்டிகோ நிறுவனம், மூன்றாண்டுகள் ஒப்பந்தத்துடன், அதிக ஊதியம் தருவதாக தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)