பதிவு செய்த நாள்
26 மார்2019
07:10
புதுடில்லி : ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைவர், நரேஷ் கோயல் பதவி விலகினார்.நரேஷ் கோயல், தன் மனைவி, அனிதா கோயலுடன் இணைந்து, 1993ல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை துவக்கினார்.
இந்நிறுவனத்தில், நரேஷ் கோயலுக்கு, 51 சதவீதம்; அபுதாபியின், ‘எதியாட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு, 24 சதவீத பங்கு மூலதனம் உள்ளது.கடும் போட்டி காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஜெட் ஏர்வேஸ் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், விமானிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது.
அதேசமயம், இந்நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி கடன் வழங்கிய வங்கிகளும், நெருக்கடி கொடுத்தன. இதையடுத்து, கடன் தீர்வு திட்டத்தை, எஸ்.பி.ஐ,. தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு உருவாக்கியது.அதன்படி, நரேஷ் கோயல் பதவி விலகி, பங்கு மூலதனத்தை, 10 சதவீதமாக குறைத்துக் கொண்டால், மேற்கொண்டு, 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்து, நிறுவனத்திற்கு உயிர் கொடுக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.
இதையேற்று, நேற்று நடைபெற்ற, ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழு கூட்டத்தில், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, நரேஷ் கோயல் தெரிவித்தார். அவர் மனைவியும், இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார்.இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பு, ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுவில், இருவரை நியமிக்க உள்ளது. அத்துடன், இடைக்கால நிர்வாகக் குழு அமைத்து, அன்றாட விமான சேவைகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளது.இந்த தகவல் வெளியானதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கின் விலை, 15 சதவீதம் உயர்ந்து, 260 ரூபாயில் நிலை கொண்டது.
வளைக்கும் நிறுவனங்கள்
ஊதியம் கிடைக்காத அதிருப்தியில் உள்ள, ஜெட் ஏர்வேஸ் விமானிகளை, வளைத்துப் போட, ‘இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனங்கள் தீவிரமாக முயன்று வருகின்றன.ஸ்பைஸ்ஜெட், இரண்டு மாத அடிப்படை ஊதியத்துடன், பணிபுரிய விரும்பும் நகரங்களை தேர்வு செய்யும் வசதியை, விமானிகளுக்கு வழங்குவதாக கூறியுள்ளது. இண்டிகோ நிறுவனம், மூன்றாண்டுகள் ஒப்பந்தத்துடன், அதிக ஊதியம் தருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|