பதிவு செய்த நாள்
02 ஏப்2019
00:39
புதுடில்லி:கடந்த மார்ச்சில், ஜி.எஸ்.டி., வருவாய், மீண்டும், 1.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.இதன் மூலம், 2018- – 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வசூல், பட்ஜெட் மறுமதிப்பீட்டை விட அதிகரித்து, 11.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த, 2018 ஏப்ரல் மற்றும் செப்டம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருந்தது.எனினும், இந்தாண்டு மார்ச்சில் தான், ஜி.எஸ்.டி., வசூல் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வகையில், 2017, ஜூன், 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமானது முதல், 75.95 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘டுவிட்டரில்’ கூறியுள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சத்து, 6 ஆயிரத்து, 577 கோடி ரூபாய் என, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, தயாரிப்பு துறையின் வளர்ச்சியையும், மக்களின் நுகர்வு பெருகி வருவதையும் குறிக்கிறது.
ஜி.எஸ்.டி., வரி விகிதங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக, ஜி.எஸ்.டி., வருவாய் உயர்ந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|