பதிவு செய்த நாள்
02 ஏப்2019
00:45
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்திய ரயில்வே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகளை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.இந்திய ரயில்வேக்கு, சென்னையில், ஐ.சி.எப்., உத்தர பிரதேசம், ரேபரேலியில், எம்.சி.எப்., பஞ்சாப், கபுர்தலாவில், ஆர்.சி.எப்., என, ரயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.
அவற்றில், 2018 -– 19ம் நிதியாண்டில், 6,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இது, 2017 –- 18ம் நிதியாண்டில் தயாரிக்கப்பட்ட, 4,470 ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடும் போது, 35 சதவீதம் அதிகம்.கடந்த நிதியாண்டில், ‘வந்தே பாரத் விரைவு ரயில்’ போன்ற, நவீன தொழில்நுட்பங்களில் பல்வேறு ரயில் பெட்டிகள் அறிமுகமாகின.
ஆண்டு முழுவதும், ரயில் பெட்டி தயாரிப்பில், அவ்வப்போது புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.முறியடிப்புஇந்நிலையிலும், ரயில் பெட்டி தயாரிப்பில், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள், ஆண்டுக்கு, 2,600 ரயில் பெட்டிகளை தயாரிக்கின்றன.இதை, இந்தாண்டு பிப்ரவரியில், சென்னை, பெரம்பூரில் உள்ள, இந்திய ரயில் பெட்டி தொழிற்சாலை முறியடித்து, உலகில் அதிக ரயில் பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையாக உருவெடுத்து உள்ளது.நடப்பு நிதியாண்டில், பிப்ரவரி இறுதி நிலவரப்படி, ஐ.சி.எப்., 2,919 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளது.
ரேபரேலியில் உள்ள, எம்.சி.எப்., தொழிற்சாலை, 2018 -– 19ம் நிதியாண்டில், 1,422 ரயில் பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித்து, 1,425 பெட்டிகளை உருவாக்கி, சாதனை நிகழ்த்தியுள்ளது.இத்தொழிற்சாலை, 2017 -– 18ம் நிதியாண்டில், 711 ரயில் பெட்டிகளை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில், ஆய்வுக்காக தனி ரயில் பெட்டி, ‘ஏசி’ ரயில் உட்பட, பலதரப்பட்ட ரயில் பெட்டிகளை, எம்.சி.எப்., அறிமுகப்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், கபுர்தாலா நகரில், 1986ல் அமைக்கப்பட்ட, ஆர்.சி.எப்., தொழிற்சாலையும், கடந்த நிதியாண்டில், ரயில் பெட்டி தயாரிப்பை அதிகரித்துள்ளது.வளர்ச்சிமத்திய மின் துறை அமைச்சராக இருந்த, பியுஷ் கோயல், 2017, செப்., 3ல் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார். அவர், ரயில்வே துறை வளர்ச்சி நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.பயணியரை பாதிக்காத வகையில், ரயில்வே வருவாயை பல வழிகளில் பெருக்கி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தார்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், ரயில் பெட்டிகள் தயாரிக்க ஊக்கமளித்தார். இதனால், ரயில்வே துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.ஐ.சி.எப்., சாதனைகடந்த, 2016 -– 17ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 1,976 ரயில் பெட்டிகளை தயாரித்தது. இது, 2017 – -18 மற்றும் 2018 -– 19ம் நிதியாண்டில், முறையே, 2,085 மற்றும் 2,919 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், ஆண்டுதோறும், 50 வகை ரயில் பெட்டிகளை தயாரிக்கிறது. சமீபத்தில், முதன் முறையாக, இன்ஜின் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் அதிவேக ரயிலை தயாரித்து, சாதனை படைத்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|