பதிவு செய்த நாள்
02 ஏப்2019
23:15
புதுடில்லி:கடந்த மார்ச்சில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அதேசமயம், நிறுவனங்களிடம், வர்த்தகச் சூழல் மேம்படும் என்ற நம்பிக்கை, ஏழு மாதங்கள் காணாத வகையில் உயர்ந்திருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் மார்ச் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தாண்டு, மார்ச்சில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.6 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரியில், 54.3 புள்ளிகளாக இருந்தது.
தயாரிப்பு துறையில், 2018, செப்டம்பருக்கு பின், இந்தாண்டு மார்ச்சில் தான், புதிய, ‘ஆர்டர்’
மற்றும் உற்பத்தி குறைந்துள்ளது. அத்துடன், வேலைவாய்ப்புகள் உருவாவதும், எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், மூலப் பொருட்கள் செலவு உயர்ந்ததால், அதன் அடிப்படையில், நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து இருந்தது.சர்வதேச பிரச்னைகளையும், உள்நாட்டு வர்த்தகத்தில் தொய்வையும் சந்தித்தபோதிலும், தயாரிப்பு துறையில், அனைத்து பிரிவுகளும், நிலையான வளர்ச்சியை கண்டுள்ளன.
அயல்நாட்டு ‘ஆர்டர்’கள் தொடர்ந்து கிடைப்பதால், நிறுவனங்கள் எத்தகைய சவாலையும் சந்திக்க கூடியவையாக உள்ளன. அதனால், நிறுவனங்களிடம், வர்த்தக சூழல் குறித்த நம்பிக்கை, ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|