சாதனை படைத்தது இந்திய ரயில்வே:இலக்கை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிப்பு சாதனை படைத்தது இந்திய ரயில்வே:இலக்கை விஞ்சி, 6,037 ரயில் பெட்டிகள் தயாரிப்பு ...  ஜி.எஸ்.டி., பதிவை தீவிரமாக பரிசீலிக்க உத்தரவு‘நிடி ஆயோக்’ அமைப்பு வலியுறுத்தல் ஜி.எஸ்.டி., பதிவை தீவிரமாக பரிசீலிக்க உத்தரவு‘நிடி ஆயோக்’ அமைப்பு ... ...
தயாரிப்பு துறை வளர்ச்சியில் தொய்வு:நிறுவனங்களிடம் வர்த்தக நம்பிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2019
23:15

புதுடில்லி:கடந்த மார்ச்சில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. அதேசமயம், நிறுவனங்களிடம், வர்த்தகச் சூழல் மேம்படும் என்ற நம்பிக்கை, ஏழு மாதங்கள் காணாத வகையில் உயர்ந்திருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்த, ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் மார்ச் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இந்தாண்டு, மார்ச்சில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.6 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரியில், 54.3 புள்ளிகளாக இருந்தது.
தயாரிப்பு துறையில், 2018, செப்டம்பருக்கு பின், இந்தாண்டு மார்ச்சில் தான், புதிய, ‘ஆர்டர்’
மற்றும் உற்பத்தி குறைந்துள்ளது. அத்துடன், வேலைவாய்ப்புகள் உருவாவதும், எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.


மதிப்பீட்டு மாதத்தில், மூலப் பொருட்கள் செலவு உயர்ந்ததால், அதன் அடிப்படையில், நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து இருந்தது.சர்வதேச பிரச்னைகளையும், உள்நாட்டு வர்த்தகத்தில் தொய்வையும் சந்தித்தபோதிலும், தயாரிப்பு துறையில், அனைத்து பிரிவுகளும், நிலையான வளர்ச்சியை கண்டுள்ளன.


அயல்நாட்டு ‘ஆர்டர்’கள் தொடர்ந்து கிடைப்பதால், நிறுவனங்கள் எத்தகைய சவாலையும் சந்திக்க கூடியவையாக உள்ளன. அதனால், நிறுவனங்களிடம், வர்த்தக சூழல் குறித்த நம்பிக்கை, ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)