பதிவு செய்த நாள்
08 ஏப்2019
23:46
புதுடில்லி:தனியார் காவல் நிறுவனங்களுக்கு, அவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, தர நிர்ணயம் செய்து, சான்றிதழ் வழங்கும் முறை, விரைவில் அமலுக்கு வர உள்ளது.
நிறுவனங்கள், கடைகள், நடிகர் – நடிகையர், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு பணியை, தனியார் காவல் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.அவற்றின் தரம், சேவை, காவல் புரிவோரின்நம்பகத்தன்மை போன்றவற்றுக்கு அளவுகோல் எதுவும் இல்லை. இதனால், பிரச்னைகள் ஏற்படும் போது, ஒப்பந்த நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கின்றன.
இதற்கு தீர்வாக, நாட்டில் உள்ள, தனியார் காவல் நிறுவனங்களின் தலைமை அமைப்பான, ‘கேப்சி’ தேசிய தரக் குழுவுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.அதன்படி, ‘சார்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ், தனியார் காவல் நிறுவனங்கள், பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரச் சான்றிதழும், தரக் குறியீடும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் செயல்பாடுகளை, தொழில்நுட்பக் குழுவின் ஆதரவுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் அடங்கிய, எம்.எஸ்.சி., கண்காணிக்கும்.அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு வழங்கும் தரச் சான்றிதழும், தரக் குறியீடும், காவல் நிறுவனங்கள் குறித்த தெளிவான பார்வையை, ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கும்.இதனால், போட்டி அதிகரித்து, தனியார் காவல் நிறுவனங்களின் செயல்பாடுகள் மேம்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சவுகிதார்
நாட்டில், தனியார் காவல் துறையில், 22 ஆயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன; அவற்றில், 85 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில் ஒன்றாக, தனியார் காவல் துறை உள்ளது.சமீபத்தில், பிரதமர் மோடி, ‘மேன் பி சவுகிதார்’ என்ற பிரசாரம் மூலம், தனியார் துறையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரிடம் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|