‘எங்களை கொஞ்சம் கவனியுங்கள்!’ ‘எங்களை கொஞ்சம் கவனியுங்கள்!’ ...  மும்பை அருகே அமையும்  ரிலையன்ஸ், ‘மெகா நகரம்’ மும்பை அருகே அமையும் ரிலையன்ஸ், ‘மெகா நகரம்’ ...
தனியார் காவல் நிறுவனங்களுக்கு தரச் சான்று:புதிய நடைமுறை விரைவில் அமலாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2019
23:46

புதுடில்லி:தனியார் காவல் நிறுவனங்களுக்கு, அவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, தர நிர்ணயம் செய்து, சான்றிதழ் வழங்கும் முறை, விரைவில் அமலுக்கு வர உள்ளது.


நிறுவனங்கள், கடைகள், நடிகர் – நடிகையர், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு பணியை, தனியார் காவல் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.அவற்றின் தரம், சேவை, காவல் புரிவோரின்நம்பகத்தன்மை போன்றவற்றுக்கு அளவுகோல் எதுவும் இல்லை. இதனால், பிரச்னைகள் ஏற்படும் போது, ஒப்பந்த நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கின்றன.


இதற்கு தீர்வாக, நாட்டில் உள்ள, தனியார் காவல் நிறுவனங்களின் தலைமை அமைப்பான, ‘கேப்சி’ தேசிய தரக் குழுவுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.அதன்படி, ‘சார்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ், தனியார் காவல் நிறுவனங்கள், பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரச் சான்றிதழும், தரக் குறியீடும் வழங்கப்படும்.


இத்திட்டத்தின் செயல்பாடுகளை, தொழில்நுட்பக் குழுவின் ஆதரவுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் அடங்கிய, எம்.எஸ்.சி., கண்காணிக்கும்.அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு வழங்கும் தரச் சான்றிதழும், தரக் குறியீடும், காவல் நிறுவனங்கள் குறித்த தெளிவான பார்வையை, ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கும்.இதனால், போட்டி அதிகரித்து, தனியார் காவல் நிறுவனங்களின் செயல்பாடுகள் மேம்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


சவுகிதார்



நாட்டில், தனியார் காவல் துறையில், 22 ஆயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன; அவற்றில், 85 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில் ஒன்றாக, தனியார் காவல் துறை உள்ளது.சமீபத்தில், பிரதமர் மோடி, ‘மேன் பி சவுகிதார்’ என்ற பிரசாரம் மூலம், தனியார் துறையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரிடம் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)