பதிவு செய்த நாள்
08 ஏப்2019
23:47
மும்பை:முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ்’ குழுமம், மும்பை அருகே பிரமாண்டமான, ‘மெகா நகரம்’ அமைக்கும்பணியை துவக்கியுள்ளதாக,தகவல் வெளியாகி உள்ளது.
இங்கு, விமான நிலையம், துறைமுகம், கடல் வழி போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.இந்நகரம், குட்டி தீவான சிங்கப்பூர் போன்று, மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக திகழும்.அடுத்த, 10 ஆண்டுகளில், இந்நகரம், 5.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், திட்டமிட்ட வடிவமைப்பில், அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், முதன் முறையாக, இது போன்ற நகரம் அமைக்கப்படுகிறது.இந்நகரை நிர்வகிக்க, சிறப்பு திட்ட ஆணைய உரிமையை, ரிலையன்ஸ் பெற்றுள்ளது.விரைவில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ், உலகத் தரத்தில், பொருளாதார மையத்தை ஏற்படுத்த, நவி மும்பையின், சிறப்பு பொருளாதார மண்டல ஆணையத்திடம்,4,000 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று உள்ளது. இதற்கு, முதற்கட்டமாக, 2,180 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|