பதிவு செய்த நாள்
08 ஏப்2019
23:53
வாஷிங்டன்:‘இந்தியாவின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு, 2019 – -20ம் நிதியாண்டில், 7.5 சதவீதமாக உயரும்’ என, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய மக்களின் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நுகர்வு பெருகிய போதும், சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கை விட குறைவாகவே உள்ளது.அத்துடன், முதலீடுகளும் பெருகி வருகின்றன. ஏற்றுமதியில், குறிப்பாக தனியார் துறையில் முன்னேற்றம் காணப்படுகிறது.
இது போன்ற காரணங்களால், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2018- – 19ம் நிதியாண்டிற்கு மதிப்பீடு செய்துள்ள, 7.2 சதவீதத்தை விட, நடப்பு நிதியாண்டில், 0.3 சதவீதம் அதிகரித்து, 7.5 சதவீதமாக உயரும்.வேளாண் துறைகடந்த நிதியாண்டில், முதல் மூன்று காலாண்டுகளில், தொழில் துறை வளர்ச்சி, 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேளாண் துறை, 4 சதவீத, சீரிய வளர்ச்சியை எட்டி உள்ளது.
பெருகி வரும் முதலீடுகளும், ஏற்றுமதியும், மக்களின் நுகர்வை அதிகரித்து, வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளன.நான்காம் காலாண்டில், அனைத்து துறைகளின் வளர்ச்சியும், ஏற்ற, இறக்கமின்றி இருந்திருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கச்சா எண்ணெய் விலை சரிவால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் பங்கு, 1.9 சதவீதமாக குறையும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2019- – 20 மற்றும் 2020- – 21ம் நிதியாண்டுகளில், நிதிப் பற்றாக்குறையின் பங்கு, 6.2 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக சரியும்.மத்திய பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, 3.4 சதவீதம் என்பதில் மாற்றம் இருக்காது.கடந்த, 2018, ஜூலை முதல், உணவுப் பொருட்கள் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவும், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்வும், பணவீக்கத்தை குறைக்க உதவின.இந்தாண்டு பிப்ரவரியில், சில்லரை பணவீக்கம், 2.6 சதவீதமாக இருந்தது. இது, கடந்த முழு நிதியாண்டில், சராசரியாக, 3.5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ரூபாய் மதிப்புரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீதத்தை விட, பணவீக்கம் குறைவாக உள்ளதால், ‘ரெப்போ’ வட்டி, இரு முறை, தலா, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது.
எனினும், கடந்த நிதியாண்டின், முதல் அரையாண்டில், அமெரிக்கா தொடுத்த வர்த்தக போரால், சில வளரும் நாடுகள் அழுத்தத்தை சந்திக்க நேர்ந்தது.இந்திய ரூபாய் வெளி மதிப்பு குறைந்தது. இதனால், 2018ல், ஜன., – அக்., வரை, அன்னியச் செலாவணி கையிருப்பு, 8 சதவீதம் சரிவடைந்தது.அதன் பின், கச்சா எண்ணெய் விலை சரிவும், அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை அமலாக்கம், எதிர்பார்த்ததை விட மெதுவாக மேற்கொள்ளப் பட்டது, வளரும் நாடுகளுக்கு சாதகமாக அமைந்தது
இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் முதலீடுகள் குவிந்தன. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 4 சதவீதம் உயர்ந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|