பதிவு செய்த நாள்
09 ஏப்2019
23:57
வாஷிங்டன்:வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இந்தாண்டும், இந்தியா முதலிடத்தை தக்க வைத்து உள்ளதாக, உலக வங்கி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர், தாங்கள் பிறந்த நாட்டில் உள்ள குடும்பத்திற்கு பணம் அனுப்புகின்றனர். அத்தகையோரில், இந்தியர்கள் தான் அதிக தொகையை, தாயகத்திற்கு அனுப்பி, தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.
இது குறித்து, உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில், 2018ம் ஆண்டிலும், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.அவர்கள் மூலம், இந்தியாவுக்கு, 7,900 கோடி டாலர், அதாவது, 5.53 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
கடந்த, மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த, 2016 மற்றும்2017ல், முறையே, 6,270 கோடி டாலர் மற்றும் 6,530 கோடி டாலர் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு அதிக அளவில் நிதியுதவி குவிந்தது.இதனால், தாயகத்திற்கு கிடைத்த பணம், 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான்சவுதி அரேபியாவின் நிதி வரத்து குறைவால், பாகிஸ்தான் ஈர்த்த தொகை, 7 சதவீத அளவிற்கு மிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இது, வங்கதேசத்தில், 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு கிடைத்த தொகை, 9.6 சதவீதம் உயர்ந்து, 52 ஆயிரத்து, 900 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 2017ல், 48 ஆயிரத்து, 300 கோடி டாலராக இருந்தது.
இதே காலத்தில், வளர்ந்த நாடுகள் உட்பட, சர்வதேச அளவில் அனுப்பப்பட்ட தொகை, 63 ஆயிரத்து, 300 கோடியில் இருந்து, 68 ஆயிரத்து, 900 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. தெற்காசியாவிற்கு அனுப்பிய தொகை, 6 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக வளர்ச்சி கண்டு, 13 ஆயிரத்து, 100 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக, சவுதி அரேபியா, குவைத், ஓமன், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா கூட்டுறவு கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடுகளில் இருந்து, தாயகத்திற்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது.ஆப்ரிக்க நாடுகள் எனினும், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான நிலவரப்படி, தாயகத்திற்கு சராசரியாக, 200 டாலர் அனுப்புவதற்கான செலவு, 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதை, ‘ஸ்திரமான வளர்ச்சி இலக்கு’ திட்டத்தின் கீழ், 2033ல், 3 சதவீதமாக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பல ஆப்ரிக்க நாடுகள் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவுகளில், தாயகத்திற்கு பணம் அனுப்புவதற்கான செலவு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடு ஈர்த்ததொகை
இந்தியா 7,900
சீனா 6,700
மெக்சிகோ 3,600
பிலிப்பைன்ஸ் 3,400
எகிப்து 2,900(2018 – கோடி டாலரில்)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|