பதிவு செய்த நாள்
11 ஏப்2019
23:29
--புதுடில்லி:வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த, கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின், சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரி, சுதிர் மாத்துார் ராஜினாமா செய்துள்ளார்.இவர் விலகலுக்கு பின், அப்பொறுப்பை, தற்காலிகமாக, வேதாந்தா குழுமத்தின் அலுமினியம் மற்றும் மின்சார பிரிவு, தலைமை செயல் அதிகாரி, அஜய் தீக் ஷித் கவனிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம், 2012ல், கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியது. அது முதல், கடந்த ஏழு ஆண்டுகளில், நான்கு, சி.இ.ஓ.,க் கள் விலகியுள்ளனர். கெய்ர்ன் இந்தியாவின், சி.எப்.ஓ., எனப்படும் தலைமை நிதி அதிகாரி, பங்கஜ் கல்ராவும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவர் தன், ராஜினாமா கடிதத்தை, கடந்த மாதம் அளித்துள்ளார்.
ஆனால், அது குறித்து, கடந்த வாரம் தான் நிறுவனம் தகவலை வெளியிட்டது.கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளோர் வெளியேறுவதால், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என, கெய்ர்ன் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|