பதிவு செய்த நாள்
11 ஏப்2019
23:31
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கான, ஐ.எஸ்.ஓ., 17088: 2008 சான்றிதழ் பெற, 25 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என்றும், அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு உள்ளதாகவும், சிபெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பால், தயிர், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்களுக்கான உறைகள் தவிர, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி வீசும் பிற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதில், ஐ.எஸ்.ஓ., 17088: 2008 சான்றிதழ் பெற்ற, மக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க விலக்கு அளிக்கப்பட்டது. இதன் பின், பல நிறுவனங்கள், ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளன.
இது குறித்து, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், தொழில்நுட்ப அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடையின் போது, ஐ.எஸ்.ஓ., 17088: 2008 சான்றிதழ் பெற்று, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
இதன் பின், இதுவரை, 25 நிறுவனங்கள், ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனர். இவற்றின் பிளாஸ்டிக் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் முடிவுகள் வர ஆறு மாத காலம் பிடிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|