வர்த்தக கடன்  14.4 சதவீதம் வளர்ச்சி வர்த்தக கடன் 14.4 சதவீதம் வளர்ச்சி ...  தேயிலை ஏலத்தில் அதிக வருமானம் தேயிலை ஏலத்தில் அதிக வருமானம் ...
பொதுத் துறை வங்கிகளுக்கு சுயாட்சி அதிகாரம் மத்திய அரசுக்கு வங்கிகள் வாரியம் பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
00:42

புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளுக்கு, சிறந்த நிர்வாகத்திற்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான, சுயாட்சி அதிகாரத்தை வழங்கலாம் என, வங்கிகள் வாரியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


பி.பி.சர்மா தலைமையிலான வங்கிகள் வாரியம், 2018அக்., – 2019 மார்ச் வரையிலான செயல்பாட்டு அறிக்கையை, மத்திய அரசுக்கு வழங்கிஉள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:


பொதுத் துறை வங்கிகளுக்கு, சிறந்த நிர்வாகத்திற்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான, சுயாட்சி அதிகாரத்தை வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கலாம்.அதேசமயம், பொதுத் துறை வங்கிகள் கடைப்பிடிக்கும் கடன் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் வங்கிகளின் கடன் செலவை குறைக்கலாம். வங்கிகள் கடன் ஒதுக்கீடும் அதிகரிக்கும்.


ஊக்கம்


இடர்ப்பாடு குறைவான வருவாய்க்கு வழி காணும் வங்கிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதேசமயம், நிர்வாகச் செயல்பாடுகளில் குறைபாடுள்ள வங்கிகளுக்கான சலுகைகள் குறைக்கப்பட வேண்டும்.செயல்பாடு அடிப்படையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, இ.எஸ்.ஓ.எஸ்., எனப்படும், வங்கி ஊழியர்களுக்கு பங்கு ஒதுக்கீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.


மதிப்பீட்டு காலத்தில், வாரியம் எடுத்த நடவடிக்கையால், பொதுத் துறை வங்கிகளில் காலியான, முழுநேர இயக்குனர்களின் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டன. எனினும், கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பணியிடத்தைத் நிரப்ப முடியவில்லை.இப்பணியிடம் தொடர்பாக, இரு முறை விளம்பரம் வெளியிடப்பட்டது. பொதுத் துறை வங்கிகள் தவிர்த்து, வெளியில் உள்ள தகுதி படைத் தோரும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது.இருந்தபோதிலும், இரு முறையும், மிகக் குறைவான விண்ணப்பங்களே வந்தன.


எல்.ஐ.சி.,


இது போன்ற காலி பணியிடங்களை நிரப்ப, வல்லுனர்களுக்கான பயிற்சி திட்டம் குறித்த பரிந்துரை, அரசிடம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.வங்கிகளை தொடர்ந்து, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் இயக்குனர்களை பரிசீலித்து, அரசுக்கு பரிந்துரைக்கும் பொறுப்பும், தற்போது, வங்கிகள் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், இந்தாண்டு ஜன.,4ல், எல்.ஐ.சி., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கான பரிந்துரையை, வாரியம் வழங்கியது.


மத்திய அரசு, வங்கிகளின் வர்த்தக செயல்பாடுகள், மறுசீரமைக்கப்பட வேண்டும் என, விரும்புகிறது. அதற்கு, வங்கிகளின் இயக்குனர் குழு ஊக்குவிக்கப்பட வேண்டும். வங்கி செயல்பாடுகளை மேம்படுத்தவும், சூழலுக்கு ஏற்ப, தேவைப்பட்டால், வங்கிகளை இணைப்பதற்கான திட்டங்களையும் வழங்கும் பொறுப்பு, வாரியத்திற்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


வளர்ச்சிக்கு வழிகாட்டி


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2016ல், பொருளாதார வல்லுனர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய, வங்கிகள் வாரியம் அமைக்க அனுமதி வழங்கியது. பொதுத் துறை வங்கிகளின் செயல்சாரா தலைவர், முழுநேர இயக்குனர் ஆகியோரை தேர்வு செய்து, பரிந்துரைக்கும் பணியை வாரியம் மேற்கொள்கிறது. பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்கும் பணியும், வங்கிகள் இணைப்பு குறித்த ஆலோசனைகளையும், இவ்வாரியம் வழங்குகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)