பதிவு செய்த நாள்
17 ஏப்2019
07:09
புதுடில்லி: விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த, 2018 – -19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், 38.4 சதவீதம் உயர்ந்து, 2,493 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய, 2017- – 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 1,801 கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் வருவாய், 8.9 சதவீதம் உயர்ந்து, 13 ஆயிரத்து, 768 கோடியில் இருந்து, 15 ஆயிரத்து, 6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 12.6 சதவீதம் அதிகரித்து, 9,017 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விப்ரோ நிறுவனம், 10 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை திரும்ப பெற திட்ட மிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பங்கு ஒன்று, 325 ரூபாய் வீதம், 32.30 கோடி பங்குகள் வாங்கப்பட உள்ளதாக, விப்ரோ நிறுவனம், செபிக்கு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|