பதிவு செய்த நாள்
17 ஏப்2019
07:11
புதுடில்லி: ‘‘ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு விரைவில் நிதியுதவி வழங்கி, மீண்டும் இயல்பான விமான சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர், சுனில் மேத்தா தெரிவித்து உள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் உள்ளது. அதனால், வங்கிகள் கூட்டமைப்பின் கடன் தீர்வு திட்டத்தை ஏற்று, நிறுவனர், நரேஷ் கோயல், மனைவி அனிதா கோயல் ஆகியோர், இயக்குனர் பதவியை துறந்தனர். பங்கு மூலதனத்தையும் குறைத்துக் கொண்டனர். இதையடுத்து, எஸ்.பி.ஐ., தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய முன்வந்தது.
இதற்காக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 75 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனினும், பங்கு விற்பனை, எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. நிறுவனத்தின் விமான சேவை, தற்போது, 10 ஆக குறைந்துள்ளது. ஊதிய நிலுவை காரணமாக, விமானிகள், வேறு நிறுவனங்களுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர, வங்கிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மத்திய நிதிச் சேவைகள் துறை செயலர், ராஜீவ் குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து, வங்கிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர், சுனில் மேத்தா, செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்து, அனைத்து தரப்பினரிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி கிடைக்கும். வழக்கம் போல, விமான சேவைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|