‘தொலைதொடர்பு துறையை எந்த கட்சியும் கண்டுக்கல’ ‘தொலைதொடர்பு துறையை எந்த கட்சியும் கண்டுக்கல’ ...  பி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை பி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் நிறுவனத்தின் ... ...
வருமான வரி படிவம் – 16ல் மாற்றம்; வரி ஏய்ப்பை தடுக்க கூடுதல் விபரங்கள் சேர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
03:35

புதுடில்லி: வருமான வரித் துறை, வரி ஏய்ப்பை தடுக்க, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான, படிவம் – 16ல், புதிய அம்சங்களை சேர்த்துள்ளது.

தொழில் நிறுவனங்கள், ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு, ஊதியத்தில், டி.டி.எஸ்., எனப்படும் மூல வரி பிடித்தம் செய்த விபரங்களை, படிவம் – 16 மூலம் வழங்குகின்றன. ஊழியர்கள், இந்த படிவத்துடன், வருமான வரி கணக்கை தாக்கல் செய்கின்றனர்.

இந்நிலையில், படிவம் – 16ல் புதிய விபரங்களை, வருமான வரித் துறை சேர்த்துள்ளது. அதன்படி, இனி, சொந்த வீட்டின் மூலம் கிடைத்த வருவாய், பிற நிறுவனங்களிடம் பகுதி நேரமாகவோ அல்லது ஒப்பந்த முறையிலோ பணியாற்றி பெற்ற தொகை உள்ளிட்ட விபரங்களை, ஊழியர்கள் அளிக்க வேண்டும்.

ஊக்கத் தொகை:
மேலும், பல்வேறு வரி சேமிப்பு திட்டங்களில் பிடித்தம் செய்த தொகை, அத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களிடம் இருந்து ஊழியர்கள் பெற்ற பல்வேறு ஊக்கத் தொகை மற்றும் இதர வருவாய் குறித்த தகவல்களை, புதிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.மேலும், வங்கி சேமிப்பு கணக்கு மூலம் ஈட்டிய வட்டி தொகையில், பிடித்தம் செய்யப்பட்ட வரி விபரங்களை அளிக்க வேண்டும்.

வரி ஏய்ப்பை தடுப்பதற்கும், வருமான வரித் துறை அதிகாரிகள், சுலபமாக மூல வரி பிடித்தம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கவும், புதிய படிவம் உதவும்.வரும், மே, 12ல், வருமான வரித் துறையின், புதிய படிவம் – 16 வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018 -– 19ம் நிதியாண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோர், புதிய படிவம் – 16 உடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

வருமான வரித் துறை, 2018- – 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மாத ஊதியம் பெறுவோரும், தணிக்கைக்கு அவசியமற்ற வகையில் வருவாய் ஈட்டுவோரும், வருமான வரி கணக்கை, வரும் ஜூலை, 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

நிறுவனங்கள்:
வருமான வரித் துறையிடம், நிறுவனங்கள் தாக்கல் செய்யும், 24க்யூ படிவமும், மாற்றப்பட்டுள்ளது. அதில், ஊழியர்களின் வீட்டு வசதி கடன் தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளன. ஊழியர்கள், வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ, நிதி நிறுவனங்கள் தவிர்த்து, பிற நிறுவனங்களிடம் கடன் பெற்றால், அந்த நிறுவனங்களுக்கு, வருமான வரித் துறை அளித்துள்ள, ‘பான்’ எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணை, 24க்யூ படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.

இது, அமைப்பு சாரா துறையில் பெறும் கடன், வட்டி உள்ளிட்ட விபரங்களை திரட்ட உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தனித் தனியாக:
சிறுசேமிப்பு, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, முதலீடு, கல்வி, வீட்டு வசதி கடன் போன்றவற்றுக்கு, 80சி, 80சி.சி.டி., 80இ, 80ஜி போன்ற பிரிவுகளில், வரி விலக்கு சலுகை பெறப்படுகிறது. எனினும், அவ்விபரங்கள், மொத்தமாக வரி விலக்கு பிரிவின் கீழ் அளிக்கப்படுகின்றன. இனி, ஒவ்வொரு பிரிவிலும் பெற்ற வரி விலக்கு குறித்த விபரங்களை தனியே தெரிவிக்க வேண்டும். இது, வருமான வரி அதிகாரிகள், சுலபமாக கணக்கை பார்வையிட உதவும்.
-சன்ஜோலி மகேஸ்வரி, இயக்குனர், ‘நாங்கியா அட்வைசர்ஸ்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)