பதிவு செய்த நாள்
23 ஏப்2019
10:59
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளான நேற்று(ஏப்., 22) கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று(ஏப்.,23) ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.78 புள்ளிகள் உயர்ந்து 38,797.96ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 40.35 புள்ளிகள் உயர்ந்து 11,634.80ஆகவும் வர்த்தகமாகின.
அந்நிய முதலீடு அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்
இன்றைய வர்த்தகத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.69.58ஆக வர்த்தகமானது. ஆனால் சற்றுநேரத்திலேயே சரிந்தது. காலை 10.45 மணியளவில் ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.69.70ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|