பதிவு செய்த நாள்
18 மே2019
23:37
டில்லி:அமலாக்கத் துறை விசாரணையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ‘வீடியோகான்’ குழுமத்திற்கு முறைகேடாக அளித்த கடன், ஏற்கனவே மதிப்பிட்டதை விட, பல மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது. இதனால், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார் கைதாகக் கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது.
சந்தா கோச்சார், வீடியோகான் குழுமத்திற்கு, 1,875 கோடி ரூபாய் கடன் வழங்கி, அதற்கு கைமாறாக, தன் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்திற்கு ஆதாயம் பெற்றதாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக, டில்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில், சந்தா கோச்சார், தன் கணவருடன், தொடர்ந்து ஐந்து நாட்கள் ஆஜராகி, தினமும் பல மணி நேரம், அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ‘உடல் நலம் சரியில்லை’ எனக் கூறி, நேற்றைய விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அமலாக்க அதிகாரிகள் விசாரணையில், சந்தா கோச்சார், வீடியோகான் குழுமத்திற்கு, 7,862 கோடி ரூபாய் கடன் வழங்கியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.இது, மதிப்பிட்டதை விட அதிகம் என்பதால், அதிகாரிகளின் பிடி இறுகியுள்ளது. இதையடுத்து, சந்தா கோச்சார் கைதாகக் கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|