வாராக்கடன் ரூ.1.20 லட்சம் கோடி வசூல் வாராக்கடன் ரூ.1.20 லட்சம் கோடி வசூல் ...  முதலீட்டு பார்வைகள் மாற வேண்டும் முதலீட்டு பார்வைகள் மாற வேண்டும் ...
கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
01:51

புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசை விட, மாநிலங்களின் கடன் வளர்ச்சி அதிகமாக உள்ளது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.


இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஐந்தாண்டுகளில், நிதிச் சந்தையில், கடன் பெறுவதில், மத்திய அரசை விட, மாநில அரசுகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.


நிதிச் சந்தை:
மத்திய அரசு பெற்ற கடன், ஆண்டுக்கு சராசரியாக, 0.26 சதவீத வளர்ச்சியுடன், ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டது. இதே காலத்தில், மாநில அரசுகள், நிதிச் சந்தையில் பெற்ற கடன், ஆண்டுக்கு சராசரியாக, 19.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன.மாநில அரசுகள் அதிக அளவில், நிதிச் சந்தையில் கடன் பெற்றதன் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.அது போல, 2014 ஏப்ரல் – 2019 மார்ச் வரையிலான, ஐந்தாண்டுகளில், மத்திய – மாநில அரசுகளின் மொத்த கடனில், மாநில அரசுகளின் பங்கு, 25.9 சதவீதத்தில் இருந்து, 45.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.


சிறுசேமிப்பு:
கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், மத்திய – மாநில அரசுகள், மொத்தம், 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன. இதில், பெரு நிறுவனங்களின் கடன் பத்திர சந்தையில் இருந்து, 6.5 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.இதே காலத்தில், வங்கி துறையின் கடன் வளர்ச்சியும், இதே அளவிற்கு காணப்பட்டது.


செலவு அதிகம்:
மதிப்பீட்டு காலாண்டில், வங்கி துறையின் கடன் வளர்ச்சி, 11.42 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மத்திய அரசு, அதன் கடன் தேவைகளுக்கு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இதில், கடனுக்கான செலவு அதிகம் என்பதால், மாநிலங்கள், நிதிச் சந்தை கடன்களை நாடுகின்றன.இதனால், நிதிச் சந்தை சார்ந்த கடன் வளர்ச்சியில், மத்திய அரசை விட, மாநிலங்களின் பங்கு அதிகமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)