பதிவு செய்த நாள்
31 மே2019
07:16
தமிழக வணிக வரித் துறையில், நாளை முதல், ‘நுண்ணறிவுப் பிரிவு’ நடைமுறைக்கு வருகிறது.
கடந்த, 2017ம் ஆண்டு ஜூலை மாதம், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அறிமுகமானது. இச்சட்டத்தின் கீழ், வரி நிர்வாகத்தை சிறப்பாகச் செயல்படுத்த, தமிழக வணிக வரித் துறை, மறு சீரமைப்பு செய்து, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது: வணிக வரித் துறையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு, நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில், வணிக வரித் துறையில் செயல்பட்டு வரும், செயலாக்கப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,யின் கீழ், வரி நிர்வாகம் கணினிமயமாக்கப்பட்டது. இதன் வழியாக பெறப்படும் புள்ளி விபரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில், நுண்ணறிவுப் பிரிவினர் ஆராய்ந்த பின், வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்படும்.
இதன் காரணமாக, வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மட்டுமே, சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.மேலும், நுண்ணறிவுப் பிரிவால் கண்டறியப்படும் குறைகளின் அடிப்படையில், வரி விதிப்பு செய்யும் அதிகாரம், இப்பிரிவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வணிக வரி மாவட்டங்களிலும், வரி நிலுவையை வசூலிக்க, ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|