பதிவு செய்த நாள்
31 மே2019
07:18
புதுடில்லி: மத்திய நிதியமைச்சகம், வாடகை குடியிருப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனங்களின், லாபத்திற்கு, வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில், டில்லியில், மத்திய நிதியமைச்சக மூத்த அதிகாரிகள், கட்டுமான நிறுவன பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கட்டுமான நிறுவனங்கள், வாடகை குடியிருப்பு வர்த்தகத்தில் ஈட்டும் லாபத்திற்கு, 10 ஆண்டுகள் வரி விலக்கு வழங்கலாம் என்பது உள்ளிட்ட யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
இதனால், வாடகை குடியிருப்பு துறையில் முதலீடு செய்வது அதிகரிக்கும். இது, ரியல் எஸ்டேட் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, நிதியமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இத்திட்டத்திற்கு, நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அது குறித்த அறிவிப்பு, ஜூலையில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள, நடப்பு, 2019 – -20ம் நிதியாண்டு பட்ஜெட்டில் வெளியாகும்.
கடந்த சில ஆண்டுகளாக, நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், முதலீடுகளின் பங்கு, 36 சதவீதத்தில் இருந்து, 29 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு, ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை தான் காரணம் என, நிதியமைச்சகம் கணித்துள்ளது.எனவே, ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
அதில் ஒன்றாக, வாடகை குடியிருப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனங்களின் லாபத்திற்கு, 10 ஆண்டுகள் வரி விலக்கு அளிக்கும் திட்டம் இடம் பெறும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வரி குறைப்பு:
மத்திய அரசு, ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க, புதிய குடியிருப்பு திட்டங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 12ல் இருந்து, 5 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதுபோல, குறைந்த விலை வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|