கட்டுமான நிறுவன லாபத்திற்கு வரி விலக்குகட்டுமான நிறுவன லாபத்திற்கு வரி விலக்கு ... வாராக்கடனை குறைக்க ஐ.ஓ.பி., நடவடிக்கை வாராக்கடனை குறைக்க ஐ.ஓ.பி., நடவடிக்கை ...
2 கோடி டன் உற்பத்தி ராம்கோ சிமென்ட் இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2019
06:43

சென்னை: ‘‘சிமென்ட் உற்பத்தியை, 2020ல், 2 கோடி டன்னாக உயர்த்துவதே இலக்கு,’’ என, ராம்கோ நிறுவனத்தின் தலைவர், பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தெரிவித்தார்.

ராம்கோ சிமென்டின் புதிய தயாரிப்பான, ‘ராம்கோ சூப்பர்கிரீட்’ அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, செயல் தலைவர், பாலாஜி கே.மூர்த்தி கூறியதாவது:உலகிலேயே அதிக சிமென்ட் உற்பத்தி செய்யும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் ஆண்டுக்கு, 250 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவில், 44 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தென் மாநிலங்களில், 16 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் தலைவர், பி.ஆர்.வெங்கட்ராம ராஜா கூறியதாவது: வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, தற்போது, ‘ராம்கோ சூப்பர்கிரீட்’ என்ற பிரீமியம் தயாரிப்பை வழங்கி உள்ளோம்.சுவரில் வெடிப்புகள் ஏற்படாத வகையில், இந்த சிமென்ட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், சூப்பர்கிரீட் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் மக்கக்கூடிய பைகளில் இந்த சிமென்ட் நிரப்பப்படுகிறது.

தற்போது, நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தியின் அளவு, 1.25 கோடி டன்னாக இருக்கிறது. இதை, 2020க்குள், 2 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)