பதிவு செய்த நாள்
07 ஜூன்2019
23:33
புதுடில்லி:தங்கத்தின் விலை, நேற்று, தலைநகர் டில்லி சந்தையில், சரிவை சந்தித்தது. 10 கிராம் தங்கம், 70 ரூபாய் குறைந்து, 33 ஆயிரத்து, 420 ரூபாயாக சரிந்தது.
ஆபரண உற்பத்தியாளர்களின் தேவை குறைவு காரணமாகவும், வெளிநாடுகளில் நிலவும் மந்த நிலை காரணமாகவும், இந்த விலை குறைவு ஏற்பட்டதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டாலும், வெள்ளி விலை அதிகரித்தது. ஒரு கிலோ வெள்ளி விலை, 100 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது.
தொழிற்சாலை பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நாணய தயாரிப்பாளர்கள் தேவை அதிகரிப்பு ஆகியவை, இந்த விலையேற்றத்துக்கு காரணமாக அமைந்தது.நேற்று, தலைநகர் டில்லியில், 99.9 சதவீதம் சுத்தமான தங்கம், 10 கிராம், 33 ஆயிரத்து, 420 ரூபாயாகவும்; 99.5 சதவீதம் சுத்தமான தங்கம், 10 கிராம், 33 ஆயிரத்து, 250 ரூபாயாகவும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|