வாராக் கடன்: புதிய அறிவிப்பு வாராக் கடன்: புதிய அறிவிப்பு ...  ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் 58 சதவீதம் உயர்வு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் 58 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிட்காயின் வைத்திருந்தால் 10 ஆண்டு சிறைமெய்நிகர் நாணய முதலீட்டுக்கு கிடுக்கிப்பிடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
23:45

புதுடில்லி:இந்தியாவில், பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களில், யாரேனும் முதலீடு செய்தாலோ, விற்பனை செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, அவர்களுக்கு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.



'மெய்நிகர் நாணயங்களை தடை செய்வது மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய விதிமுறைகள் குறித்த மசோதா 2019' வரைவில், இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களுக்கான அனுமதியை அரசு வழங்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, இந்த பரிந்துரை பேரிடியாக அமைந்துள்ளது.




மேலும், இந்தியாவிலுள்ள இத்தகைய நாணய பரிமாற்றங்களுக்கான நிறுவனங்களுக்கும், பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்தியாவில், மெய்நிகர் நாணயங்கள் குறித்த விதிமுறைகளை ஏற்படுத்த, ஒரு குழு அமைக்கப்பட்டது. பொருளாதார விவாகாரங்களுக்கான செயலர், சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த குழு, மெய்நிகர் நாணய மசோதாவுக்கான வரைவு திட்டத்தை உருவாக்கி உள்ளது.




இக்குழுவில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளனர். மேலும், புலனாய்வு பிரிவுகள், மத்திய நேரடி சட்ட வாரியம் ஆகியவற்றிலிருந்தும், பிரதிநிதிகள், வரைவு திட்டத்துக்கான குழு உறுப்பினர்களாக பங்கேற்றுள்ளனர்.இக்குழு, மெய்நிகர் நாணயங்களை தங்கள் கணக்கில் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, பரிவர்த்தனை செய்தாலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மெய்நிகர் நாணயங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டாலோ, சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும்.




மேலும், ஜாமின் கிடைக்காத பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது.மேலும், ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவது குறித்து, அரசு யோசிக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.



ரிசர்வ் வங்கி தடை




கடந்த, 2018 ஏப்ரலில், மெய்நிகர் நாணயங்களை தடை செய்வதாக, ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கிகள் உட்பட, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் எந்த அமைப்புகளும், மெய்நிகர் நாணயங்களுக்கான சேவைகளை வழங்கக்கூடாது என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, எச்.டி.எப்.சி., - எஸ்.பி.ஐ., போன்ற வங்கிகள் சேவையை நிறுத்திவிட்டன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)