பகுதி நேர வேலைவாய்ப்பு 'அமேசான்' புதிய திட்டம்பகுதி நேர வேலைவாய்ப்பு 'அமேசான்' புதிய திட்டம் ...  அமெரிக்காவிலிருந்து இறக்குமதி கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா ...
அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்த்த இந்தியா :ஐ.நா.,சபை வர்த்தக அறிக்கையில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2019
00:17

புதுடில்லி:கடந்த ஆண்டில், இந்தியா, 2.92 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என, ஐக்கிய நாடுகள் சபையின், வர்த்தக அறிக்கை தெரிவித்துள்ளது.


ஐ.நா., சபையின், ‘உலக முதலீட்டு அறிக்கை – 2019’ எனும், அதன் வர்த்தக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018ல், இந்தியாவில், 2.92 லட்சம் கோடி ரூபாய்க்கு, அன்னிய நேரடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தயாரிப்பு துறை, தொலை தொடர்பு துறை, நிதிச் சேவைகள் துறை ஆகியவற்றில், அதிகளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 6 சதவீதம் அதிகமாகும்.


தெற்கு ஆசியாவில், அன்னிய நேரடி முதலீடு, 3.5 சதவீதம் அதிகரித்து, 3.75 லட்சம் கோடி ரூபாய் அளவை எட்டியிருக்கிறது. இதில், இந்தியா மட்டும், 77 சதவீத அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தெற்கு ஆசியாவில், இத்தகைய பெருமளவிலான முதலீடுகளுக்கு முக்கிய காரணம், இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் வளர்ச்சி அடைந்து வருவது தான்.


இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில், பிற நாடுகளுடனான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மூலம், 2.29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 1.60 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மின்னணு வர்த்தகம், தொலை தொடர்பு ஆகிய துறைகளில் மட்டும், கடந்த ஆண்டில், 91 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தை, ‘வால்மார்ட்’ கையகப்படுத்தியது மிக முக்கியமான ஒன்றாகும். தெற்கு ஆசியாவைச் சேர்ந்த, பிற நாடுகளைப் பொருத்தவரை, வங்கதேசம், 25 ஆயிரம் கோடி ரூபாயையும்; இலங்கை, 11 ஆயிரம் கோடி ரூபாயையும் ஈர்த்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளை விட, இது அதிகமாகும்.

பாகிஸ்தானை பொறுத்தவரை, 27 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அங்கு செய்யப்பட்ட முதலீடு, 17 ஆயிரம் கோடி ரூபாய்.மொத்தத்தில், கடந்த ஆண்டில், தெற்கு ஆசியாவைச் சேர்ந்த வளரும் நாடுகளில், அன்னிய முதலீடு, 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.உலகில் உள்ள, 5,400 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 4,000த்துக்கும் அதிகமானவை, ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் உள்ளன.


இந்தியா முதலீடுகளை பெருக்கும் வகையில், விதிகளை தளர்த்தி வரும் காரணத்தால், அங்கு முதலீடு அதிகரித்து வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவில் உள்ளசிறப்பு பொருளாதார மண்டலங்கள்

சீனா: 2,543

பிலிப்பைன்ஸ்: 528


இந்தியா: 373


துருக்கி: 102

தாய்லாந்து: 74


கொரியா: 47


மலேஷியா: 45

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)