பதிவு செய்த நாள்
19 ஜூன்2019
07:14
புதுடில்லி: நாட்டின் மொத்த ஜவுளி மில் உற்பத்தியில், காதி துணிகளின் பங்கு, ஐந்து ஆண்டுகளில், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்த ஜவுளி மில் உற்பத்தியில், காதி துணிகளின் பங்கு, கடந்த நிதியாண்டில், 8.49 சதவீதமாகும். மில் ஜவுளி உற்பத்தி, 2014 – 15 நிதியாண்டில், 24,860 லட்சம் சதுர மீட்டராக இருந்தது. இதுவே காதி துணி உற்பத்தி, 1,054 லட்சம் சதுர மீட்டராக இருந்தது. இது, 4.23 சதவீதமாகும். 2018-_19 நிதியாண்டில், மில் ஜவுளி உற்பத்தி, 20,120 லட்சம் சதுர மீட்டராக குறைந்தது. காதி, 1,708 லட்சம் சதுர மீட்டராக அதிகரித்தது. காதியின் பங்கு, 8.49 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|