பதிவு செய்த நாள்
20 ஜூன்2019
07:08
புதுடில்லி: மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘இந்தியா மார்ட் இன்டர்மெஷ்’ நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது. ஒரு பங்கின் விலை, 970 முதல், 973 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 475 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம், 48.88 லட்சம் பங்குகள் விற்பனைக்கு விடுக்கப்பட உள்ளன. பங்கு வெளியீடு, 24ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிவடைகிறது. பங்கு வெளியீட்டை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஜெப்ரீஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. நிறுவன பங்குகள், மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகிய சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|