5,106 மோசடி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு 5,106 மோசடி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு ... லக்ஷ்மி விலாஸ் பேங்க் இணைப்புக்கு அனுமதி லக்ஷ்மி விலாஸ் பேங்க் இணைப்புக்கு அனுமதி ...
புதிய உச்சத்தில் தங்கம் விலை: ரூ.26 ஆயிரத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2019
11:51

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.1000 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,000ஐ கடந்துள்ளது.

தங்கம் விலை நேற்று (ஜூன் 20) சவரனுக்கு ரூ.528 உயர்ந்திருந்த நிலையில், இன்று (ஜூன் 21) சவரனுக்கு ரூ.464 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.58 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.3271ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.26,168க்கும் விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் (24 காரட்) விலை ரூ.34,270 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.50 ஆக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் கூட்டமைப்பாக, 'பெடரல்' வங்கி உள்ளது. இது, தற்போது, வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்த போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

அதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், அந்நாட்டு வங்கிகளின் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யாமல், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சீனா, அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக போரால், உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாலும், ஏற்கனவே பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

31 கிராம் உடைய ஒரு 'அவுன்ஸ்' தங்கம் விலை 20ம் தேதி, 3,000 ரூபாய் உயர்ந்து உள்ளது. இதுபோன்ற காரணங்களால், உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது; விலை உயர்வு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)