பதிவு செய்த நாள்
22 ஜூன்2019
06:33
புதுடில்லி: லக்ஷ்மி விலாஸ் பேங்க், இண்டியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் இணைப்புக்கு, இந்திய போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், அனுமதி வழங்கி உள்ளது.
நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில், லக்ஷ்மி விலாஸ் பேங்க், இண்டியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைவது குறித்து அறிவித்தது. இதையடுத்து, தற்போது, இந்திய போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
லக்ஷ்மி விலாஸ் பேங்கின் பங்குதாரர்கள், தங்களின் ஒவ்வொரு, 100 பங்குகளுக்கும், இண்டியாபுல்ஸ் நிறுவனத்தின், 14 பங்குகள் மாற்றாக வழங்கப்படும் என, பேங்கின் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இந்த இணைப்பின் மூலம், ஊழியர்களின் எண்ணிக்கை, 14 ஆயிரத்து, 302 ஆகவும், கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இரு நிறுவனங்களும் வழங்கிய கடனின் மதிப்பு, 1.23 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|