‘நிலுவை தொகையை தாருங்களேன்’‘நிலுவை தொகையை தாருங்களேன்’ ... ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., வரி தாக்கல்; கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., வரி தாக்கல்; கவுன்சில் கூட்டத்தில் முக்கிய ... ...
‘டெலிபோன் பூத்’ போன்று ‘வைபை’ சேவைக்கு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
06:37

புது­டில்லி: சிறிய கடை­கள், உண­வ­கங்­கள் போன்­றவை, ‘வைபை’ இணைப்பு சேவைக்­கான, சில்­லரை விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­வதை அனு­ம­திப்­பது குறித்து, மத்­திய அரசு தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கிறது.

இது குறித்து, தொலை தொடர்பு துறை அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: முன், ‘டெலி­போன் பூத்’ வைத்து நடத்தி வந்­ததை போல, இப்­போது வைபை இணைப்பை, சில்­லரை விற்­ப­னைக்கு வழங்­கு­வது குறித்து, அரசு ஆலோ­சித்து வரு­கிறது. முத­லில் தொலை தொடர்பு கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘டிராய்’ அமைப்பு தான், இத்­த­கைய வைபை சேவையை வழங்க, ‘பப்­ளிக் டேட்டா ஆபீஸ்’ எனும், வர்த்­தக மாதி­ரியை முன்­மொ­ழிந்­தது. இதற்கு தொலை தொடர்பு சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தன. இருப்­பி­னும், அரசு இத்­த­கைய வைபை சில்­லரை விற்­ப­னை­யின் மூலம், விரை­வில் நாட்டை டிஜிட்­டல் மய­மாக்க முடி­யும் என்­ப­தில் உறு­தி­யாக உள்ளது.

தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­கள் எதிர்ப்பு குறித்து, டிராய் தலை­வர், ஆர்.எஸ்.சர்மா கூறி­ய­தா­வது: தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, புதிய போட்­டி­யா­ளர்­கள் உரு­வா­கு­வர் என்­பது தவ­றான அனு­மா­ன­ம். அவர்­க­ளது, ‘பிக்ஸ்ட் லைன்’ இணைப்பு வைத்­தி­ருப்­ப­வர்­கள், இனி அவர்­க­ளது சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­க­ளாக மாறு­வர் என்­பதை பார்க்­கத் தவ­றி­விட்­ட­னர். விரை­வில் இச்­சேவை வசதி ஏற்­ப­டுத்­தப்­படும். இவ்­வாறு, அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)