பதிவு செய்த நாள்
25 ஜூன்2019
10:48
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளான இன்று(ஜூன் 25) ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.41 புள்ளிகள் சரிந்து 38,998.55ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 35.25 புள்ளிகள் சரிந்து 11,664.40ஆகவும் வர்த்தகமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, ஐடி தொடர்பான பங்குகள் சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருந்தன.
காலை 10.45மணியளவில் சென்செக்ஸ் 5.73 புள்ளிகள் உயர்ந்து 39,128.69ஆகவும், நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 11,670ஆக வர்த்தகமானது.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.69.30ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|