பதிவு செய்த நாள்
27 ஜூன்2019
07:01
புதுடில்லி: நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்தின் பதவிக் காலம், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக, அமிதாப் காந்த், 2016ம் ஆண்டு, பிப்ரவரி, 17ல் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும். இரண்டாண்டுகள் நிறைவுற்றதும், அவருக்கு ஜூன், 30ம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது அவரது பதவிக் காலம் முடிவடைய இருக்கும் நிலையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது, 2021ம் ஆண்டு ஜூன், 30ம் தேதி வரை, பணிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு, ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல், இந்த பணிக் கால நீட்டிப்புக்கான ஆணையை வழங்கி உள்ளது.அமிதாப் காந்த், நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் செயலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|